Tamilnadu

News May 8, 2024

பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை

image

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நீதிமன்றங்களிலும், சட்ட உதவி மற்றும் சட்ட அறிவு பெறவும், பொதுமக்களுக்கு அவற்றை இலவசமாக எடுத்துரைப்பதற்காக 50 “சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இவர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குவார்கள் என  நீதிபதிகள் தெரிவித்தனர்.

News May 8, 2024

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல்

image

உயர் அதிகார குழு ஒப்புதல் HIGH POWER COMMITTEE வழங்கி 17மாதங்களாக COMEPETANT AUTHORITY பல்வேறு துறைகளின் ஒப்புதல் வழங்காமல் முடங்கியிருந்த சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் மெட்ரோ இரயில் திட்டத்திற்கு தமிழக அரசின் COMEPETANT AUTHORITY ஒப்புதல் வழங்கி கோப்புகள் தமிழக அரசின் நிதிதுறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக RTI  மனுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.

News May 8, 2024

அந்தியூர் : ரூ.7.97 லட்சத்திற்கு ஏலம்

image

அந்தியூர் அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 3,254 தேங்காய்கள் ரூ.20,574-க்கும், 74 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2,17,125 க்கும் ஏலம் போனது. 172 மூட்டை நிலக்கடலை ரூ.3,72,176 க்கும், 22 மூட்டை எள் ரூ.1,88,034 க்கும் ஏலம் போனது. மொத்தம் வேளாண் விளை பொருட்கள் ரூ.7,97,909 க்கு ஏலம் போனதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

News May 8, 2024

மே தின பொதுக்கூட்டம்

image

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மே தினம் மற்றும் மறைந்த முருகேசன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சேகர் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக மாநில குழு உறுப்பினராக வாலண்டினா, ஜெயசீலன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 8, 2024

செங்கத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கடந்த நான்கு நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் கோடை வெப்பத்தில் மின்விசிறி, மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்களை இயக்க இயலாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்வெட்டு குறித்து முறையான அறிவிப்பை வெளியிட அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.

News May 8, 2024

கல்லூரி கனவு 2024 மே.8இல் தொடக்கம்

image

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, நெல்லையில் இன்று கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 7, 2024

அரசு மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு… கடும் அவதி

image

அந்தியூர் அரசு மருத்துவமனையில் காலை முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கர்ப்பிணிகள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலக்ட்ரீசியன் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடை ஏற்பட்டது.

News May 7, 2024

முதியோர் இல்லத்தில் கேக் வெட்டிய நடிகர் 

image

நடிகர் அப்புக்குட்டி தனது பிறந்தநாளை, சென்னை கோடம்பாக்கம் அன்னை உள்ளம் ஆதரவற்ற பெண்கள் முதியோர் இல்லத்தில், கேக் வெட்டிக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். தொடர்ந்து முதியோர்களுக்கு உணவு பரிமாறினார். மேலும், அவர்களின்  மருத்துவச் செலவிற்கு தேவையான உதவித் தொகை வழங்கி, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

News May 7, 2024

சென்னையில் மின்தேவை புதிய உச்சம்

image

சென்னை மாநகரில் மின்தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 3 ஆம் தேதி 4,470 மெகாவாட்டாக இருந்ததே உச்சமாக இருந்த நிலையில், நேற்று (மே 6) இரவு 10.30 மணிக்கு 4,590 மெகாவாட்டாக மின்தேவை உயர்ந்துள்ளது. மேலும், மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்தாலும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

பாஜக பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் கோவர்த்தனன் வீடு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஓட்டல் ஆகிய இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது. 6 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவர்தன் மற்றும் அவரது மகனிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளது.

error: Content is protected !!