Tamilnadu

News January 1, 2026

தூத்துக்குடி: இளம்பெண் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை?

image

கீழவைப்பார் கிராமத்தைச்சேர்ந்த மெரின் என்பவரின் மனைவி இன்ஃபன்ட் தீபிகா (34). இன்ஃபன்ட் தீபிகாவிற்கு சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனவிரக்தியில் இருந்து வந்த இன்பன்ட் தீபிகா தனது கணவர் மெரினுக்கு தனது குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குளத்தூர் போலீசார் விசாரணை.

News January 1, 2026

நாகை: 46 பேர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது

image

நாகை மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் கொலை மற்றும் இதர வழக்குகளில் 34 பேரும், தொடர் மது கடத்தலில் ஈடுபட்ட 12 பேர் என நாகை மாவட்டத்தில் மொத்தம் 46 பேர் ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

தஞ்சை: 690 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு!

image

தஞ்சை காவல் சரகத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாருர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில், கைப்பற்றப்பட்ட 690.54 கி கஞ்சா நீதிமன்ற உத்தரவு பெற்று அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜியாவுல்ஹக் தலைமையில், இன்று செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கஞ்சா போதைப் பொருட்களை தீயிட்டு அழிக்கப்பட்டது.

News January 1, 2026

தஞ்சை: 690 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு!

image

தஞ்சை காவல் சரகத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாருர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில், கைப்பற்றப்பட்ட 690.54 கி கஞ்சா நீதிமன்ற உத்தரவு பெற்று அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் ஜியாவுல்ஹக் தலைமையில், இன்று செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கஞ்சா போதைப் பொருட்களை தீயிட்டு அழிக்கப்பட்டது.

News January 1, 2026

தென்காசி மருத்துவமனையில் வேலை; ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தேசிய நலக்குழுமம் (NHM)-TN.RIGHTS Projects திட்டத்தின்கீழ் காலியாக உள்ள தொழிற்சார் சிகிச்சையாளர் (Occupational Therapy) பணியிடத்திற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர் தேர்வு மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட வலைதளம் https//tenkasi.nic.in/notice_category/recruitment, விண்ணப்பிக்கலாம்

News January 1, 2026

மயிலாடுதுறை: 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 27 நபர்கள், திருட்டு குற்றங்களில் – 3 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் – 14 நபர்கள், போதைப் பொருள் கடத்தல் – 1 நபர், பாலியல் குற்றங்களில் – 5 நபர் என மொத்தம் 50 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2024-ஆம் ஆண்டு 47 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 1, 2026

மதுரை: கார் ஏறி இறங்கியதில் ஒருவர் பரிதாப பலி

image

மதுரை பெருங்குடி ரோட்டில் உள்ள சாய் ஓட்டல் அருகே, சாலையோரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுத்திருந்தார். அங்கு நிறுத்தி இருந்த காரை அதன் உரிமையாளர் எடுக்கும் போது, படுத்திருந்தவர் மீது கார் ஏறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மதிச்சியம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 1, 2026

வேலூர்: பள்ளி மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த வாலிபர்!

image

வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி, இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியிடம் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் நேற்று (டிச.31) வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சக்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2026

கோவையை பதற வைத்த இ-மெயில்!

image

கோவையில் சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மாவட்ட எஸ்பி அலுவலகம் எஸ்பிஐ வங்கி பிரதான அலுவலகம் என பாதுகாப்பு மிகுந்த பகுதியில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று 24வது முறையாக கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் சிங்கள மொழியில் புத்தாண்டு அதிசயம் என தலைப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

News January 1, 2026

திருவாரூர்: ரயில் மோதி சிதைந்த உடல்

image

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் மீனவர் வீரமுத்து (55) என்பவர் நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல, அப்பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற ரயில் மோதி உடல் சிதைந்து உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற திருவாரூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!