Tamilnadu

News March 22, 2024

காஞ்சிபுரம்: வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் மார்ச் 24ம் தேதி பயிற்சி அளிக்க இருப்பதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 22, 2024

பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோயில் திருவிழா நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெற்று வருகின்றது. அவற்றின் பாதுகாப்பு பற்றி நேற்று அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் கோவில் செயல் அதிகாரி சீதாராமன் தலைமையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 22, 2024

பல்லாவரம்: நாடாளுமன்ற ஆலோசனைகூட்டம்

image

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி-1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பம்மல் தெற்கு பகுதிக்குட்பட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 22, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை

image

விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 21) வெளியிட்ட செய்திக் குறிப்பில், மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் நாளைக்கு பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.

News March 22, 2024

திருச்சி: 38 இலட்சம் பறிமுதல்

image

வையம்பட்டியில் நேற்று தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏடிஎம்-ற்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை தணிக்கை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.38 இலட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் பணத்தை வட்டாட்சியர் தனலட்சுமியிடம் ஒப்படைத்த நிலையில் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2024

கூட்டணி கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

image

காரைக்குடி கலைஞர் பவளமாளிகையில் நேற்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர். பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் S.மாங்குடி மாவட்ட துணை செயலாளர் த.சேங்கைமாறன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

News March 22, 2024

மாரியம்மாளின் படத்திற்கு திமுக வேட்பாளர் மரியாதை

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் மருத்துவர் ராணிஸ்ரீ குமார் வைகோவின் தாயார் மாரியம்மாளின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.     தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் இல.சுதாபாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இராஜா, குருவிகுளம் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News March 22, 2024

யானை வாகனத்தில் பெருமாள் பவனி

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று இரவு பங்குனி உத்திர விழாவின் ஆறாம் நாள் யானை வாகனத்தில் ரங்கநாத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் வெண்பட்டு உடையில் இராஜ அலங்காரத்தில் அமர்ந்தவாறு மங்கல வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா வந்தார். பக்தர்கள் தீபாராதனை காட்டி தங்களது வேண்டுதலை வெளிப்படுத்தினர்.

News March 22, 2024

திருநெல்வேலி: இரவில் போலீசார் வாகன சோதனை

image

மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் போலீசார் இரவு நேர வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று (மார்ச் 21) நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி தேர்தல் விதிமீறல்கள் உள்ளனவா என சோதனை செய்தனர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

News March 22, 2024

திருவள்ளூர்: போலீஸ்-கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு கூட்டு சாலைகள் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையில் நேற்று இரவு அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!