India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி, தகடூர் எனும் ஊரில் அதியமான் கோட்டை அமைந்துள்ளது. இதில் காலபைரவர் கோயில், சோமேசுவரர் கோயில், சென்னராயப் பெருமாள் கோயில் ஆகியவை உள்ளன. இங்கு நடத்திய அகழ்வாய்வில், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், வர்ணமிட்ட பானை ஓடுகள், வில் அம்பு போன்ற கீறல்கள் உள்ள பானை ஓடுகள், சுடுமண் மணிகள், இரும்பு ஆணிகள், போன்றவை கிடைத்தன. இவற்றின் காலம் கி.மு.100 முதல் 300வரையிலான காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்கும் கருவி செயல்படாததால், ஒரு வாகன ஓட்டியிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்த குற்றத்துக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறைக் கழகத்துக்கு மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் இன்று ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. அமெரிக்கன் கல்லூரி துணை தலைவர் மார்ட்டின் டேவிட், 2020ஆம் ஆண்டு சுங்கச்சாவடியை கடந்த போது அவர் மோசமாக நடத்தப்பட்டது குறித்து தீர்ப்பு அளித்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பேருந்து நிலையத்தில் 7- இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் ஒ. ஆர். எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கரைசலை குடிப்பதன் மூலம் பொதுமக்கள் வெயிலின் சோர்வு நீங்கி புது உற்சாகத்துடன் இருப்பதாக மக்கள் இன்று தெரிவித்தனர்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4.ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள எல்.சி.81 ரயில்வே கேட் தினசரி 100 மேற்பட்ட ரயில்கள் செல்வதால் ரயில்வே கேட் மூடப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடைகால வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் பரிந்துரைப்படி நகராட்சி சார்பாக கோடைகால தற்காலிக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.
மதுரை பெத்தானியாபுரம் அருகே உள்ள மாதா கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாயில் இன்று பெண் சிசு சடலமாக கிடந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த கரிமேடு போலீசார் சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசுவின் சடலத்தை மீட்டு சிசுவை வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற சித்தன்னவாசல் சமண குடைவரைக் கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த சமண குடைவரைக் கோயிலில் 7-8ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. இதில் வரையப்பட்ட சித்திரங்கள் தாவரங்களில் இருந்து பெற்றப்பட்டவை. சரியான பராமரிப்பின்றி இருந்த இக்குகையில் ஓவியங்கள் மங்கத் தொடங்கியது. 1990களில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள தேசிய கிராம சுகாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தை நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, ஒத்தக்கடை பகுதியில், கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று நடைப்பெற்றது. அப்போது, தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏர் இந்தியா விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டிய 183 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். ஏர் இந்தியா நிர்வாக ஊழியர்களிடம் பயணிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.