Tamilnadu

News June 1, 2024

லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் கிராசிங் ரோடு அருகே சென்னையில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த லாரிக்கு பின்னால் சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து லாரியை முந்தி செல்ல முயன்ற போது லாரியின் பின்பக்கத்தில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் தனியார் ஆம்னி பேருந்தின் டிரைவரின் இரண்டு கால்களும் நசுங்கியது.

News June 1, 2024

இந்த வருடம் 2.25 இலட்சம் பேர் மலையேற்றம் – வனத்துறை.

image

கோவை பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுயம்பு லிங்கத்தை தரிசிக்க 51/2 கி.மீ தூரம் மலைப்பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த பிப். முதல் இன்று வரை 2.25 லட்சம் பேர் மலையேற்றம் செய்துள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 25 ஆயிரம் பேர் கூடுதலாக மலையேறி உள்ளதாக இன்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

News June 1, 2024

மத்திய அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்!

image

மதுரை மாவட்டத்தில் தண்ணீர், மின்சாரம், விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கையில் சிக்கியவர்களை வீரத்துடன் செயல்பட்டு காப்பாற்றியவருக்கு மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகிறது. விருதுபெற தகுதியுள்ளவர்கள் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பம்’ என குறிப்பிட்டு விண்ணப்பத்தை ஜூன் 20க்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு அனுப்பலாம் என அறிவிப்பு

News June 1, 2024

பிக்மி எண் பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூர் ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவரும் கர்ப்பத்தை பதிவு செய்து கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக அடையாள எண் பிக்மி எண்ணை https://picme.tn.gov.in/picme public /என்ற முகவரியில் விவரங்கள் தந்து பிக்மிஎண் பெறுவது மிகவும் அவசியம். அதே போல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை பெறுவதற்கும் மேற்கண்ட இணைய தள முகவரியில் பெறவேண்டும்

News June 1, 2024

பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் மாநில போலீஸாா், மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் என 3 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், மொத்தம் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்று SSP நாராசைதன்யா தெரிவித்தார்

News June 1, 2024

தென்காசி:கல்வியறிவு பயிற்சி முகாம் நடந்தது

image

குற்றாலம், ஶ்ரீ பராசக்தி ‌‍‍மகளிர் கல்லூரி, மகளிர் பயில்வு மையம் மற்றும் தென்காசி மாவட்ட சமுகநலத்துறை பெண்கள் அதிகாரம் அளிக்கும் மையம் ஆகியவை இணைந்து இலக்கமுறை கல்வியறிவு பயிற்சி பராசக்தி கல்லூரியில் நேற்று கல்லூரி முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது விஜிலா நேசமணி அனைவரையும் வரவேற்றார்.இலக்கமுறை கல்வியறிவு பயிற்சியாளர் உதயாவேனி தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த பயிற்சி அளித்தார்.

News June 1, 2024

சிறப்பு பயிற்சியின் நிறைவு விழா

image

பெரம்பலூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (ம) சென்னை பாவை பவுண்டேஷன் சார்பில் பெரம்பலூர் வட்டார வள மையத்துக்குட்பட்ட பெரம்பலூர் கிழக்கு ஊ.ஒ.தொ. பள்ளியில் செயல்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி மே.20 முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடந்த பயிற்சியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் (ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.

News June 1, 2024

குரூப் 4: நாமக்கல் மாவட்டத்தில் 51,433 போ் எழுதுகின்றனா்

image

நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 9 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 174 மையங்களில் 51,433 போ் எழுதுகின்றனா். மேலும், தோ்வு மையங்களைக் கண்காணிக்க 15 பறக்கும் படை குழுக்களும், 44 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News June 1, 2024

மாநகர பேருந்துகளில் கதவுகள் பொருத்தம்

image

சென்னை (ம) புறநகர் பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்து படியில் தொங்கி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கூறி வந்த நிலையில், இனி புதிதாக வரும் பேருந்துகளில் கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News June 1, 2024

நாகை எம்பி செல்வராஜ் நினைவிடம் திறப்பு

image

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜீன் நினைவிடம் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று சித்தமல்லி அவரது இல்லத்தில் நடைபெற்றது.   நினைவிடத்தையும் படத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திறந்து வைத்து பேசினார். இதில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், காங் மாவட்ட தலைவர் துரைவேலன், அமமுக மாவட்ட செயலாளர் காமராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்

error: Content is protected !!