Tamilnadu

News March 25, 2024

திருச்சி:முன்னாள் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு 

image

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கர்நாடகா தண்ணீர் தராததால் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர் நிலம் கருகியது.ஆனால் அவர் தண்ணீர் கேட்டு தரவில்லை. ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம்.நாட்டு மக்கள் முக்கியமல்ல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி கூடவழங்கவில்லை.தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

News March 25, 2024

திருநாகேஸ்வரம்: வீரபத்திரசாமி கோயில் கும்பாபிஷேகம்

image

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் வீரபத்திரசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 44 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. கடந்த 22ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4வது கால யாக சாலை பூஜைகள் நடந்தது. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News March 25, 2024

தென்காசி:அமைச்சருடன் திமுக வேட்பாளர் சந்திப்பு

image

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று வருகை தந்த தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை,தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்

News March 25, 2024

சேலம்: மழை பெய்ய வேண்டி சிறப்பு பிராத்தனை

image

சேலம் மாவட்டம் சங்ககிரி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் நேற்று சிவஜெயந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைதிபெற வேண்டும், மழை பெய்ய வேண்டுமென வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது அமைப்பின் நிர்வாகிகள் அரங்கநாதன், லட்சுமி, வாசவி கிளப் மண்டலத்தலைவர் ஆனந்த், பல் மருத்துவர் அருள், ஓம்ராம் அறக்கட்டளை நிறுவனர் சுந்தரவடிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

தி.மலை : பாஜக வேட்பாளர் உறுதி

image

தி.மலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ. அஸ்வத்தாமன் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழிற்சாலையை தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழில்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும் என்று உறுதியளித்தார்

News March 25, 2024

திருப்பத்தூர் : மகுட வரதன் அரவான் சாபம் தெருக்கூத்து நாடகம்

image

திருப்பத்தூர் மாவட்டம். செவ்வத்தூர். அடுத்த பெரியார் நகர். காளியம்மன் திருவிழா மற்றும் வேம்பரசு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு கோகுல கண்ணா நாடக சபா வழங்கும் மகுடவரதன் அரவான் சாபம் என்னும் தெருக்கூத்து நாடகம் அதி விமர்சையாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

News March 25, 2024

நாமக்கல்லில் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்

image

மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கான முதல் பயிற்சி முகாம் நேற்று காலை 9.30 முதல் மாலை 5 வரை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. உமா அவர்கள் தலைமையில் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டனர். இந்த முகாமில் வாக்காளர் பெயரை சரிபார்த்தல், ஓட்டு எந்திரத்தை கையாளும் விதம் போன்றவற்றை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

News March 25, 2024

திண்டுக்கல்லை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவரும், திண்டுக்கல் தொகுதி வேட்பாளருமான வி.எம்.எஸ்.முகமது முபாரக், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தின் நிலவளம், நீா்வளம் முறையாக முறைப்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு வருவேன். இந்த தொகுதியின் உறுப்பினராக பொதுமக்கள் என்னைத் தோ்வு செய்தால், நாட்டிலுள்ள 543 தொகுதிகளிலும் முன் மாதிரி தொகுதியாக திண்டுக்கல்லை மாற்றுவேன் என்றார்.

News March 25, 2024

நெல்லை: பெண்ணை அவதூறாக பேசி மிரட்டியவர் கைது

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அனிதா. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வலதி என்பவர் 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்தார். இதைக் கேட்டபோது அனிதாவை அவதூறாக பேசி மிரட்டினார். இதுகுறித்து அனிதா அளித்த புகாரின்படி தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வலதியை நேற்று (மார்ச் 24) கைது செய்தார்.

News March 25, 2024

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பார்வையிட்ட ஆட்சியர்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது
குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்
அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டார். உடன் மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!