India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு எடுத்து வரும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.2,09,46,060 பறிமுதல் செய்துள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.நேற்று மாலை சீர்காழி கடைவீதி கொள்ளிடம் முக்கூட்டு பழையபேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடை கடையாக ஏறி இறங்கி வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் இரட்டை இலை அறையில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரண் குமாரி பாசி நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த நிலையில் கடலூரில் இன்று வரை பா.ம.க – தங்கர்பச்சான், தேமுதிக – சிவக்கொழுந்து, நா.த.க – மணிவாசகன் , பகுஜன் சமாஜ் கட்சி – தணிகைசெல்வன் , சுயேட்சையாக ராசமோகன் , பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் உட்பட 10 பேர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேலை பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரப்பட்டது.
மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராம சீனிவாசன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில், அதில் அவரது சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராம சீனிவாசன் மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் சொத்துக்கள் 2.48 கோடி உள்ளதாகவும், அசையா சொத்துக்கள் ராம சீனிவாசன் மற்றும் அவரது மனைவி பெயரில் 1.02 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம், இன்று (மார்ச் 26) மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி கடலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பூபதி (51) குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் நேற்றிரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தனது அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டுள்ளார். இன்று (மார்ச் 26) காலையும் அறையை விட்டு வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது, பூபதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கருப்பூரில் உள்ள கட்டிடம் ஒன்றில் 26.03.2024 இன்று மாலை கட்டிட உரிமையாளர் அனைத்து கட்சிகளுக்கும் சாதகமாக அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சியின் சின்னங்களை ஒரே கட்டடத்தில் வரைந்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பையும் பேசப் பொருளாகவும் ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.