India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்
கடலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கு சென்று கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையில் எழுத்துப்பூர்வமாக வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்குப்பதிவு செலுத்த முடியாது, எனக் கூறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை, அவனியாபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் சைனீஸ் உணவுத் திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உணவு திருவிழாவில் “மடிராகன் ஃபீஸ்டா” என்ற தலைப்பில் 1000 ஆண்டுகள் பழமையான உணவுகளை இன்றும் சமைத்து அசத்தியுள்ளனர். சைனா நாட்டை சேர்ந்த பாரம்பரிய சுமார் 200 வகையான உணவுகளை சமையல் வல்லுநர்கள் சமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை திருவாரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சாருஸ்ரீ பார்வையிட்டு அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனடியாக பம்பரமாக சுழன்று பணியாற்ற தொடங்கி விட்டனர். இதன் எதிரொலியாக இன்று சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் இன்று முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 20க்கு மேற்பட்ட பறக்கும்படை குழுவினர் அனைத்து வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் குறித்து பலத்த சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை யானைக்கவுனியில் தனியார் காம்ப்ளெக்ஸில் தங்கியிருந்த யாசர் அராபத், குணா ஜெயின் ஆகியோரிடம் இருந்து ₹1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல். இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நேற்று காலை தண்டையார் பேட்டை காவல்நிலையத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் குறித்து கேட்டறிந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.
தாராபுரத்தில் இருந்து கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ஞான பிரகாசம் என்பவர் மினி லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி நேற்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
நீலகிரி கலெக்டர் அருணா நேற்று (மார்ச்.16) கூறுகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டு உள்ளது. மேலும், தேர்தல் குறித்த புகார்களை 1800-425-2782, கட்டுப்பாட்டு அறை எண்கள்: 0423-2957101, 2957102, 2957103, 2957104 ஆகிய எண்களை அனுகலாம் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.