Tamilnadu

News March 29, 2024

குப்பை கிடங்கில் பற்றிய தீ

image

பழனி மலை அடிவாரத்தில் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை கிடங்கில் இன்று தீ பற்றியது. சற்று நேரத்தில் தீ முழுவதுமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 29, 2024

காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் பிரிவு செயலாளர் நியமனம்

image

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் பிரிவு செயலாளராக, மதுரையைச் சேர்ந்த இளைஞர் எம். ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டார். சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News March 29, 2024

ஒடுகத்தூர் சந்தையில் 8 லட்சம் வர்த்தகம்

image

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் (மார்ச் 29) இன்று நடந்த சந்தையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் இன்று மட்டும் 8 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News March 29, 2024

தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்கள் அளிக்க செயலி

image

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச்.29) அவருடைய எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் நடத்தை விதி (MCC) மீறல்கள் தொடர்பான புகார்களை, பொதுமக்கள் “civil investigator” செயலி (App) மூலம் அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா 18004251215 என்ற தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். புகார்கள் உடனடியாக பறக்கும் படை குழுக்கள் மூலம் விசாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

News March 29, 2024

கவர்னர் ஆர்.என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகை

image

கவர்னர் ஆர். என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்னர் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சை ஏற்படுவதால், கவர்னர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

News March 29, 2024

திண்டுக்கல்: போதையில் பயணம்: விபரீதம்

image

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெலிங்டன் என்பவர் இன்றுமது அருந்திய நிலையில், தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, திண்டுக்கல்லை அடுத்த நல்லமனார் கோட்டை அருகே ரயில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  தகவலறிந்து வந்த இரும்புப் பாதை போலீசார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வெலிங்கடனிடம் விசாரணை நடத்தினர்.

News March 29, 2024

மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி திடீர் சாவு

image

நெல்லை: தருவை அருகே புது காலனியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மதன் நேற்று (மார்ச் 28 ) காலை திடீரென்று நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 29, 2024

திண்டுக்கல்: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளனவா என்பதை சோதனை செய்தனர்.

News March 29, 2024

1ம் தேதி முதல் மதுரையில் துவக்கம்

image

மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. நீச்சல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் சிறுவர், சிறுமியர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாக (உயரம் 125 செமீ மேல்) இருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி வகுப்பு தொடர்பாக நீச்சல்குளத்தில் நேரில் முன்பதிவு செய்து கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

News March 29, 2024

திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர்கள் தெருமுனைப் பிரச்சாரம்

image

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளான குமரன் திருநகர், ஒய்.எம்.ஆர்.பட்டி, விவேகானந்தா நகர், என்.ஜி. ஓ. காலனி போன்ற பகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இன்று தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர்.

error: Content is protected !!