India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் புதுப்பாளையம் ஊராட்சி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்து ஆறு மாதமே ஆன புள்ளிமான் ஒன்று பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது. அதேபோன்று அதே பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. விசாரணையில் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு புள்ளி மான்களும் நேற்று உயிர் இழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வீராமூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (57), தையல் கலைஞர். இவர் சிறுவந்தாடு அடுத்துள்ள மோட்சகுளம் பகுதியில் உள்ள அக்னி குளம் அருகே கரும்பு தோட்டத்தில் கை, தலை, காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் நேற்று (மார் 16) இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் கோபால்பட்டி வேலுமணி மகன் பிரவீன் (29). இவர் குன்னூர் அருகே செங்குட்டுவராயர் மலை பகுதிக்கு சென்று, செங்குத்தான பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அதிகாரிகள் இன்று (மார்ச் 17) கூறுகையில், “ஆபத்தான இடம் என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல அரசு தடை விதித்து உள்ளது. எனவே தடையை மீறி இது போன்ற ஆபத்தில் சிக்காதீர்கள் ” என அறிவுறுத்தினர்.
ஆவடி அடுத்த பாலவேடு, கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகேயுள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைப்பெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நாளை முதல் (18.3.24) ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கேப்பரை பகுதியில் ரூ 38 கோடியில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலை, திருவரங்குளத்தில் ரூ 4.48 கோடியில், வடகாடு பகுதியில் ரூ 7.77 கோடியில், புதுக்கோட்டை ஆவணம் சாலை ரூ 51.21 கோடியிலுமான ரூ 51.25 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளையும், கொத்தமங்கலம் ஊராட்சியில்
ரூ 13.50 இலட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி (65). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கண்டுகுளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவகாசியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தலைமையின் தற்போது பழனி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பழனியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சுப்பையா சிவகாசியின் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி பேட்டை வாய்த்தலையை சேர்ந்த
ப. பெரியசாமி (38).இவர் தனது டூவீலரில் பெருகமணி பகுதியில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்த போது அவ்வழியே வந்த டூவீலர் மோதியதில், படுகாயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்திலேயே இறந்தார்.இதையறிந்த பேட்டைவாய்த்தலை போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்கு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பதிந்து விசாரணை நடத்தினார்கள்.
மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி சட்டவிரோதமாக சாராயம் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 சாராயபாட்டில்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்த 2 பெண்களையும் இன்று கைது செய்தனர்
Sorry, no posts matched your criteria.