India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆம்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அதிமுகவிற்கு நான் ஒருமுறை பலி ஆடாக இருந்தேன் தற்போது பாவம் மருத்துவர் பசுபதி பலி ஆடாக கிடைத்து இருக்கிறார் என சாடினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைகாலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையோரம் விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். இவ்வாறு விற்கப்படும் குளிர்பானங்கள் தரமானதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயிலில் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் விரும்பி பயணிக்கிறார்கள். அப்படி வருபவர்கள் ரயில் முன் நின்று, போட்டோ எடுப்பது வழக்கம். ஆனால் இன்று காலை குன்னூர் ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்க தடை விதித்து விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு, பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பகுதியில் ஆர்த்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழங்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கில் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் பெற்றோர் இன்று டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியிடம் மனு அளித்தனர்.
கொங்கு மண்டல பகுதிகளில் வரும் 20 நாட்களுக்கு, 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும், கோவையில் 37-39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இதனால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் தேவையான நீர் உட்கொள்ள வேண்டும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வருகிற பொது தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை நீலகிரி கலெக்டர் அருணா இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் வினியோகித்தார் . பேருந்தில் ஏறி பயணிகளுக்கும் கொடுத்தார். அவ்வழியாக வந்த கேஸ் சிலிண்டர் வாகனத்தை நிறுத்தி சிலிண்டர்களில் பிரசுரங்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மானாமதுரை, காரைக்குடி, காளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.