India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கோட்டப்பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 14 வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 06.25 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – தூத்துக்குடி ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு அவர்களை ஆதரித்து இன்று (ஏப்ரல் 2 ) மாலை 7 மணி அளவில் பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்.
திருச்சி உறையூர் கல்லறை மேட்டு தெரு அருகில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் மதில் சுவர் கட்டப்படுவதை கண்டித்து, வீடு தோறும் கருப்பு கொடி ஏற்றி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கல்லறை மேட்டு தெரு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல்-2024 ஏப்.19ம் தேதி, தமிழ்நாட்டி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். அதே போன்று தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளது. உங்களுக்கு தேர்தல் குறித்த சந்தேகம், உதவிகள் தேவைப்படின் ‘1950’ என்ற எண்ணுக்கும், சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற எண்ணுக்கும் அழைக்கலாம்.
மக்களவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 13, 200 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் 2 ஆம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவவர்கள் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (GENERAL OBSERVER) ராஜேஸ்குமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் மணிவேல் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
நெமிலி தாலுகா வேட்டாங்குளம் கிராமம் சின்ன தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவரது வீட்டில் கனரக லாரி இன்று மோதியது .இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. வீட்டின் முன்பக்கம் லேசாக சேதமடைந்தது. இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் குடிபோதையில் இருந்தாரா என்று விசாரிக்கின்றனர்.
கேரளாவை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி கோபால் மகன் தினேஷ் என்பவர் வைத்திருந்த ரூ. 60 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைக் கண்டித்து வாழைக்காய் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள், எஸ்ஏஇ இந்தியா சதரன் பிரிவு ஆல் நடத்தப்பட்ட தேசிய அளவிலான மின் இருசக்கர வாகன வடிவமைப்புப் போட்டியில் கலந்துகொண்டனர். இதில், இக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய புதிய பேட்டரி மூலம் இயங்கும் மின் இருசக்கர வாகனத்திற்கு தேசிய அளவில் மூன்றாவது பரிசு கிடைத்தது.
நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் அக்க்ல்லூரி முன்பாக இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.