India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தளி அடுத்துள்ள காலனட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36) விவசாயி. இவர் டூவீலரில் மதகொண்டப்பள்ளி கக்கதாசம் சாலையில் சம்பவம் அன்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்தது. படுகாயமடைந்த சதீஷை அங்கிருந்தோர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதீஷ் இறந்தார். இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி குழுமணி அருகே அதிமுக பிரமுகர் அன்பரசனின் மனைவி, எட்டரை ஊராட்சி தலைவரான திவ்யா. அவரது வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த வருமான வரித்துறையினர் இன்று திவ்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி என்ஐடியில் புத்தகத்தின் சக்தி மற்றும் பயோ மெடிக்கல் கருவிகள் எனும் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் டிஆர்டிஒ பிரமோஸ் திட்ட முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் பேசுகையில், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகள் எந்த காலத்திலும் சுணக்கம் அடையாது. சிறந்த எதிர்காலம் உள்ள இந்த மூன்று துறைகளிலும், மாணவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 3 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நேற்று நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக முதன்மை தேர்வர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நேற்று அவை தலைவர் சேதுபதி தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் முன்னிலை வகித்தார். உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன் குமார் சிறப்புரையாற்றினார். இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப்.16 ஆம் தேதி கோவைக்கு பிரச்சாரம் செய்ய வரவுள்ள வைகோவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணித்ததாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நாகப்பட்டு கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்ற மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பதாக அறிவித்து தமிழக அரசு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மக்களவை தொகுதியில் சிலமலையை சோ்ந்தவர் விக்கிதேவன், குமணன்தொழுவை சோ்ந்த சிவமாயன் ஆகியோா் தங்களது தபால் வாக்கைப் பதிவு செய்து வெற்றி வாக்கு என்று தலைப்பிட்டு தங்களது முகநூல் பக்கத்தில் பகிா்ந்துள்ளனா்.இவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத் தோ்தல் பிரிவு சாா்பில் மாவட்டக் காவல் துறை நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீது நேற்று வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. விருதுநகர் மாவட்டதில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டதில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரைக்கும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி மின்னலுடன் மிதமான பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் படி அறிவுறுத்துப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.