Tamilnadu

News April 13, 2024

தபால் வாக்குகளை பகிா்ந்தவர்கள் மீது வழக்கு

image

தேனி மக்களவை தொகுதியில் சிலமலையை சோ்ந்தவர் விக்கிதேவன், குமணன்தொழுவை   சோ்ந்த சிவமாயன் ஆகியோா் தங்களது தபால் வாக்கைப் பதிவு செய்து வெற்றி வாக்கு என்று தலைப்பிட்டு தங்களது முகநூல் பக்கத்தில் பகிா்ந்துள்ளனா்.இவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத் தோ்தல் பிரிவு சாா்பில் மாவட்டக் காவல் துறை நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீது நேற்று வழக்கு பதியப்பட்டுள்ளது.

News April 13, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. விருதுநகர் மாவட்டதில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டதில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

திருவாரூர் மதியம் 1 மணி வரை மழை

image

திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரைக்கும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி மின்னலுடன் மிதமான பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் படி அறிவுறுத்துப்பட்டுள்ளது.

News April 13, 2024

நாகை அருகே 66 ஆண்டுகளாக தொடரும் மத நல்லிணக்கம்

image

நாகை மாவட்டம் வலிவலம் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன்
சுவாமி ஊர்வலம் நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 11ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. இவ்விழாவினை 66 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இந்து,கிறிஸ்டின், முஸ்லிம், என மூன்று மதத்தை சேர்ந்தவரும் உபயதாரர்களாக பங்கு கொண்டு நடத்தி வருவது மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது.

News April 13, 2024

மயிலாடுதுறை: கல்லூரி மாணவிக்கு நிதி உதவி

image

சீர்காழி லயன்ஸ் சங்கம் சார்பில் நகரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு நேற்று விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட கல்லூரி மாணவி ஒருவருக்கு சிகிச்சைக்காக ரூ.11000 நிதி உதவி வழங்கினர். லயன்ஸ் சங்கத் தலைவர் சந்துரு தலைமையில் செயலாளர் சரவணகுமார், பொருளாளர் ஆரிப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மாணவிக்கு நிதி உதவி அளித்தனர்.

News April 13, 2024

மதுரையில் 4 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

image

மதுரை, வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவ்வழியாக உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

நெல்லை: வேலைநிறுத்த போராட்டம்

image

நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் இன்று (ஏப்.13) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் சம்பளம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகமே சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை மாநகராட்சி முழுவதும் துப்புரவு பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.

News April 13, 2024

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக குறைந்தது

image

முல்லைப்பெரியாறு அணையில் ஜன.17ல் நீர்மட்டம் அதிகபட்சமாக 139 அடியை எட்டியது. அதன் பின் கடந்த 3 மாதங்களாக மழையின்றி நீர்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்வரத்து குறைந்தது. இன்று (ஏப்.13) காலை 6 மணி நிலவரப்படி 115.20 அடியாக உள்ளது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 105 கன அடி நீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை- 5 ஆண்டு சிறை

image

மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25), கடந்த 2021 இல் இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!