Tamilnadu

News April 13, 2024

தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் பிற பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பதிவுள்ள அலுவலர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் வசதி உள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News April 13, 2024

ஆட்டுக்குட்டியுடன் வாக்கு சேகரித்த பாஜகவினர்

image

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதி வீரபாண்டி பகுதியில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆடு, மாடு, பால் கேன்களுடன் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 13, 2024

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

image

அம்பேத்கர் பிறந்த நாள் விழா நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News April 13, 2024

திருவள்ளூர்: குவிக்கப்பட்ட துணை ராணுவத்தினர்

image

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய பாதுகாப்பு படை போலீசார், துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதன்படி செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்திரவின் பேரில் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் மீஞ்சூர் அரியன் வாயல், பஜார் வீதியில் அணிவகுத்து சென்றனர்.

News April 13, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளம்பட்டியில் 100% வாக்கு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரயு அங்குள்ள வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை சுவர்களில் ஒட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

News April 13, 2024

மோடி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை

image

அகஸ்தியர்பட்டி மைதானத்தில் வரும் 15ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வருகிறார்.தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏப்ரல் 14,15 ஆகிய 2 தேதிகளில் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டி பகுதியை சுற்றியுள்ள சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு  ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என  மாவட்ட போலீஸ்  எஸ்பி. சிலம்பரசன்  தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

நீலகிரி மழைப்பொழிவு விவரம்

image

நீலகிரி மாவட்டத்திக்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குன்னூர் 6 செ.மீட்டரும், பில்லிமலை எஸ்டேட் 5 செ.மீட்டரும், கோத்தகிரி எஸ்டேட் 4 செ.மீட்டரும், கெத்தை 3செ.மீட்டரும், கிண்ணக்கொரை 2 செ.மீட்டரும், கோத்தகிரி, பூதப்பாண்டி, பர்லியார், ஆதார் மற்றும் அழகரை எஸ்டேட் பகுதிகளில் 1 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.

News April 13, 2024

நீலகிரி: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று நீலகிரியில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 13, 2024

தேனி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராம்நாடு, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், சேலம், கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் நெல்லை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 13, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல், சிவகங்கை, ராம்நாடு, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், சேலம், கரூர், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை மற்றும் நெல்லை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!