India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் முதுகலை 2ம் ஆண்டு மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதா (தற்போது கல்லூரி முதல்வர்) மீது கலெக்டரிடம் மாணவி புகார் அளித்தார். எனவே சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி இன்று முதல்வர் சுமிதா மற்றும் உடந்தையாக செயல்பட்ட அவரது கணவர் பொன்னுதுரை ஆகிய இருவரை கைது செய்தனர்.

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், ஏ.வி.பி., லேஅவுட், போயம்பாளையம், சக்தி நகர், திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 781 பூங்காக்களில் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் மற்றும் 1,000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, 05.01.26 அன்று 1,373 பேருந்து நிறுத்தங்களில் தூய்மை பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று பூங்காக்களில் தேவையற்ற செடிகள், அகற்றப்பட்டதாக மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.07) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, புன்செய் புளியம்பட்டி, ஆம்போதி, செல்லம்பாளையம், டாணாபுதூர், நல்லூர், பவானிசாகர், பண்ணாரி, கொத்தமங்கலம், திம்பம், ஆசனூர், கோட்டமாளம், புதுபீர்க்கடவு, சிப்காட் வளாகம், வாவிக்கடை, பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை சாலை, திருவாச்சி, ஓலப்பாளையம், மாந்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

புதுச்சேரியில் பணியின் போது செய்தியாளர் உயிரிழந்தால் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியும், நிரந்தரமாக பணி செய்ய முடியாமல் போகும் செய்தியாளருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி மற்றும் பெருநோயால் பாதிக்கப்பட்டால் ரூ.3 லட்சம் நிதியும், விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ.2 லட்சம் நிதி என அறிவித்து புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் லட்ச தீப விழா இது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு விழாவாக கொண்டப்படுகின்றது. இந்த கோவிலில் உள்ள பல்வேறு தீர்த்தங்களில் சங்கு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்தபிரமை உள்ளவர்கள் இந்த சங்கு தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வேண்டினால் குணமடைவார்கள் என நம்பிக்கையாக உள்ளது. இதை ஷேர் செய்யவும்..

தணிகைபோளூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). இவர் நேற்று உளியம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் வேட்டையாட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள நிலத்தில் பன்றிக்காக மின்வேலி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மின்வேலியில் சிக்கி வெங்கடேசன் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதனை தாலுகா போலீசார் இன்று (ஜன.6), அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூர் அருகே காட்பாடியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வேலூரில் அமைந்துள்ள பழமையான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலை சுற்றி அதிகமான மூலிகைகள் இருப்பதால் நோய் தீர்க்கும் மகிமையும் இருக்கிறது. இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்தால் திருமண தடை நீங்கும், வியாபாரம் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தி.மலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட கோயிலாகும். இது ஒரு சிவன் கோயில் இருந்தும் தொழில் தொடங்க நினைப்பவர்கள் இங்கே வந்து விநாகயகரை தரிசிப்பதின் வழியே தொழில் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிகையாக இருக்கிறது. மேலும் தொழில் நஷ்டங்கள் இருந்தாலும் தீரும் என்பது ஐதீகம். தொழில் தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு ஷேர்

1.திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில், 2.பசலிக்குட்டை முருகன் கோயில், 3.லட்சுமிபுரம் கோயில், 4.திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில், 5.திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், 6.மயில் பாறை முருகன் கோயில், 7.வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில், 8.பாராண்டப்பள்ளி சிவன் கோயில், 9.கந்திலி வெக்காளியம்மன் கோயில், 10.பாப்பாயி அம்மன் கோயில். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.