Tamilnadu

News January 6, 2026

தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவருக்கு ஆட்சியர் வரவேற்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று (06.01.2026) வருகை புரிந்த தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி டாக்டர் வெ. ஆறுச்சாமியை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த ஆய்வின் போது தூய்மைப் பணியாளர்களின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

News January 6, 2026

அரக்கோணம் வழியாக பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் எண்;06034 ஜனவரி 11 மற்றும் 18 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11:30 மணிக்குக் கோயம்புத்தூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 9:50 மணிக்குச் சென்னை சென்ட்ரல் சென்றடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

News January 6, 2026

பெரம்பலூர் :புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அனிதா இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் தெரிவித்தார். புதிய எஸ்பி-க்கு காவல்துறை உயர் அலுவலர்களும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

News January 6, 2026

கிருஷ்ணகிரி: யானை முகம் கொண்ட அதிசய கோயில்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் உள்ளது ஐராவத ஈசுவரர் கோயில். முன்,பின் என இரட்டை கருவறைகள் கொண்ட இந்த கோயிலின் பின்புறம் உள்ள கருவறையில் உள்ள லிங்கத்தில் யானையின் முகம் உள்ளது.ஹஸ்தி என்ற யானை வந்து வழிபட்டதால் லிங்கம் யானை முகம் பெற்றது. அதனால் இந்த ஊர் முதலில் ஹஸ்திமுகம் என பெயர் பெற்று இன்று அத்திமுகம் என மாறியுள்ளது. தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க..

News January 6, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

செங்கோட்டையை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி பெருமிதம்

image

எனது தந்தை பேருந்து நடத்துனர், தாய் பீடி சுற்றும் தொழிலாளி. நான் முதல்வன் திட்டத்தில் பயன் பெற்று IPS தேர்வில் வெற்றி பெற்று, இன்று ஒரு அதிகாரியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். என்னால் முடிந்தது என்றால், உங்களாலும் முடியும் என்று உலகம் உங்கள் கையில் எனும் கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் விழாவில் செங்கோட்டையை சேர்ந்த இளம் IPS அதிகாரி இன்பா பேச்சு.

News January 6, 2026

நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 6, 2026

சேலம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

சேலத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 6, 2026

திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

திண்டுக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 6, 2026

புதுகை: மாங்கல்ய கனவை நனவாக்க வழி!

image

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள பிரகதாம்பாள் திருக்கோயில், மாங்கல்ய வரம் அருளும் முக்கிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் அருள்புரியும் அன்னை பிரகதாம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!