Tamilnadu

News January 7, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், 10, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 7, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், 10, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 7, 2026

ஆம்பூர் அருகே வேலை தேடி சென்ற வாலிபர் ரயிலில் தவறி விழுந்து பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் நியூ அம்பேத்கர் காலனி சேர்ந்தவர் கலையரசன் இவரது மகன் சதீஷ் (வயது 27) என்பவர் ஈரோட்டில் வேலை தேடிச் சென்று மீண்டும் நேற்று (ஜன.5) இவர் தனது சொந்த ஊருக்கு செல்ல இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும்போது ஆம்பூர் அருகே தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 7, 2026

மக்கள் செல்ல தடை – திருச்சி கலெக்டர் உத்தரவு

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட கிராமப் புறங்களில் உயர்தர இணைய சேவை வழங்க ‘பாரத்நெட்’ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் (DLFP) தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 14-க்குள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24965595 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்

image

ஜனவரி மாதத்தில் திருக்குறள் வார விழாவை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இருந்து 30 பேரை தேர்வு செய்ய திருக்குறள் வினாடி வினா தேர்வு வரும் 9-ம் தேதி ஈரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

சென்னையில் தறிகெட்டு ஓடிய கார்; அடுத்தடுத்து மோதி விபத்து

image

சென்னை, கே.கே.நகர் பகுதியில் சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. சாலையில் தாறுமாறாக தறிகெட்டு ஓடிய அந்த கார் சாலையில் 2 ஆட்டோக்கள், 2 லோடு ஆட்டோக்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விப்பத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் காரை மடக்கிபிடித்தனர். அப்போது ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

கள்ளக்குறிச்சியில் 5 பெண்கள் உட்பட 50 பேர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் திருச்சி வேலூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 50 பேர் மீது அந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 7, 2026

தி.மலையை உலுக்கும் கொடூர கொலை!

image

ஆரணி பகுதியை சேர்ந்த டேனி வளனரசு(19). வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BA படித்துவந்தார். இவருடன் நண்பர்கள் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), இன்பவர்மா (18) ஆகியோர் தங்கி படித்து வந்துள்ளனர். ஒரே பெண்ணை வளனரசுவு, கிஷோர் கண்ணன், பார்த்தசாரதி ஆகியோர் காதலித்த நிலையில், மது போதையில் டேனியை கொன்று ஆந்தரவில் உள்ள காட்டில் சடலத்தை வீசி உள்ளனர். 3 பேரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

அரியலூரில் 347 பேர் கைது!

image

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் – உதவியாளர்கள் என 347 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!