Tamilnadu

News January 7, 2026

நாகை: போதைப் பொருள் பதுக்கியவர் கைது

image

நாகை மாவட்டம், வாய்மேடு காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நாகரத்தினம் மற்றும் போலீசார் நேற்று மருதூர் மாடிக் கடை என்ற இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது ராமதாஸ் (25) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் 45 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றி ராமதாஸை கைது செய்தனர்.

News January 7, 2026

திருத்தணி தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் ஜமால்(39). பழைய பட்டுப் புதவை வியாபாரியான இவர், சில நாட்களுக்கு முன் மது போதையில் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 2 வாலிபர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன்(25) என்பவரை போலீசார் கைது செய்து, மற்றோரு நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

திருத்தணி தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் ஜமால்(39). பழைய பட்டுப் புதவை வியாபாரியான இவர், சில நாட்களுக்கு முன் மது போதையில் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 2 வாலிபர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன்(25) என்பவரை போலீசார் கைது செய்து, மற்றோரு நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

புதுக்கோட்டை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஜன.13, 20ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு புதுகைக்கு அடுத்த நாள் அதிகாலை 3.03 மணிக்கு வந்து 3.05 மணிக்கு புறப்படும். இதேபோல் தாம்பரம் நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதுக்கோட்டைக்கு 14, 21-ந்தேதி மாலை 6.13 மணிக்கு வந்து 6.15க்கு புறப்படும். SHARE IT

News January 7, 2026

ஓசூரில் குளத்தில் விழுந்து தற்கொலை!

image

கிருஷ்ணகிரி: ஓசூர் ஹவுசிங் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(69), ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சிகிச்சைகள் பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், தேர்பேட்டை பச்சை குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட ஓசூர் டவுன் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 7, 2026

தருமபுரியில் அதிரடி கைது!

image

காரிமங்கலம் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (41), விவசாயியான இவர், பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் தொடா்பாக, காரிமங்கலம் வட்டாட்சியரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பைநல்லூா் பகுதி நில அளவையராக பணியாற்றி வரும் சௌந்தரராஜன் (32), ரூ.13 ஆயிரத்தை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதுகுறித்த புகாரில் சௌந்தரராஜனை போலீசார் கைது செய்தனர்.

News January 7, 2026

குமரி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News January 7, 2026

பன்றி வெடியில் சிக்கி பசுமாடு உயிரிழப்பு

image

பெருவளையம் ஊராட்சி தச்சம்பட்டை சேர்ந்தவர் கண்ணுரெட்டி . இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது . இன்று ஜனவரி 6 ஆம் தேதி திடீரென வெடி சத்தம் கேட்டது. மாட்டின் உரிமையாளர் அங்கு ஓடி சென்று பார்த்ததில் மாட்டுக்கு தாடை கிழிந்து ரத்தம் ஒழுகியது . பன்றிக்கு வைத்த வெடியில் பசுமாடு சிக்கியது தெரிய வந்தது . விபத்தில் பசுமாடு உயிரிழந்தது காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்

News January 7, 2026

ராணிப்பேட்டை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: சிக்கிய அலுவுலர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சரண்யா தேவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (ஜன.5) திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஜன்னல் வழியாக வீசப்பட்ட பார்சலில் இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் மீட்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 செட் பேண்ட்-சர்ட் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .

News January 7, 2026

ராணிப்பேட்டை: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: சிக்கிய அலுவுலர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சரண்யா தேவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (ஜன.5) திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஜன்னல் வழியாக வீசப்பட்ட பார்சலில் இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் மீட்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 செட் பேண்ட்-சர்ட் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .

error: Content is protected !!