Tamilnadu

News January 8, 2026

புதுகை: அரசு பேருந்து மோதி விபத்து; பெண் படுகாயம்!

image

சாந்தநாதபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலிதேவி (59). இவர் இலுப்பூர் பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அஞ்சலிதேவி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அஞ்சலிதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News January 8, 2026

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் திருட்டு

image

ராமநாதசாமி கோயிலுக்கு சொந்தமான நம்புநாயகி அம்மன் கோயில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள உண்டியலில் தினமும் பக்தர்கள் ஏராளமான காணிக்கை செலுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருடர்கள் சிலர் கோயில் கதவை உடைத்து உண்டியலை கோயிலுக்கு துாக்கிச் சென்று உடைத்துள்ளனர். உண்டியல் உள் அறையை உடைக்க முடியாததால் உண்டியலை அங்கேயே போட்டுச்சென்றனர். போலீசார் விசாரிகின்றனர்.

News January 8, 2026

அரியலூர்: சாலை விபத்தில் 211 பேர் உயிரிழப்பு

image

அரியலூர் மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு வாகன விபத்து உயிரிழப்பு வழக்குகள் 205-ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆகும். (2024-ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174). இதில் பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக, செல்போன் பேசிக்கொண்டும் இயக்கியதால் நடைபெற்றுள்ளதாக மாவட்ட SP விஸ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

அரியலூர்: சாலை விபத்தில் 211 பேர் உயிரிழப்பு

image

அரியலூர் மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு வாகன விபத்து உயிரிழப்பு வழக்குகள் 205-ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆகும். (2024-ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174). இதில் பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக, செல்போன் பேசிக்கொண்டும் இயக்கியதால் நடைபெற்றுள்ளதாக மாவட்ட SP விஸ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கல்லூரி செல்பவர்கள், சிறப்பு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுடன் சிறப்பு பள்ளி செல்பவர்களுக்கு, பேருந்து இலவச பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்று ஜன.7 முதல் ஜன.31-ஆம் தேதி வரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கல்லூரி செல்பவர்கள், சிறப்பு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுடன் சிறப்பு பள்ளி செல்பவர்களுக்கு, பேருந்து இலவச பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்று ஜன.7 முதல் ஜன.31-ஆம் தேதி வரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

பொங்கல் பரிசு: திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8,35,844 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 980 குடும்பங்கள் என மொத்தம் 8,36,824 குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (ஜன.8) முதல் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.3,000 பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

பொங்கல் பரிசு: திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8,35,844 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 980 குடும்பங்கள் என மொத்தம் 8,36,824 குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (ஜன.8) முதல் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.3,000 பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

பொங்கல் பரிசு: கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பினை அறிவித்துள்ளது. இதற்காக கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்க்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை நேரில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

தேனி: பொங்கல் பரிசு குறித்து கலெக்டர் NEW UPDATE..

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ரூ.3000 பணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதற்கான புகார் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!