India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை ராதாபுரத்தை சேர்ந்தவர் பேரின்பராஜ் (35) இவர் பூதப்பாண்டி அருகே தங்கியிருந்து கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் தனது கடனை திருப்பி கேட்க சாமியார்மடம் சென்றுள்ளார். அந்த சமயம் அங்கு பைக்குகளில் வந்த சுபின் (35), ஜோஸ் (33), சபரி (26) உள்பட 4 பேர் பேரின்பராஜை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பேரின்பராஜ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாத்தான்குளம் அருகே முதலூரை சேர்ந்தவர் மார்ட்டின் (30). கார் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் நெல்லை சீவலப்பேரி அருகே சுடுகாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தார். இது தொடர்பாக நெல்லை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உடையார்பட்டியை சேர்ந்த நம்பிராஜன் 31, பணகுடியை சேர்ந்த கிதியோன் 20, தோணித்துறையை சேர்ந்த முருகப்பெருமாள் 22 ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. போலீசார் இவர்களை நேற்று கைது செய்தனர்.

காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் ஏரிக்கரையில் கடந்த 31-ந் தேதி பள்ளிக்குப்பம் பகுதியைச் திவாகர் (25) இறந்து கிடந்தார். இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதத்தால் திவாகர் பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட வினோத்குமாரை (24) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஹரிஷ்குமார் (24) விஜய் ஆகிய இருவரும் நேற்று காட்பாடி கோர்ட்டில் சரணடைந்தனர்.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்து ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற ஜன.12ஆம் தேதி காலை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஆகையால், கடலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் மணிகண்டன். இவர் சத்தி-அத்தாணி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அப்போது அவ்வழியாக வந்த லாரி மணிகண்டன் மீது மோதியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் எட்டாமடையில் கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரிடம் வேர்கிளம்பியை சேர்ந்த பிரகாஷ் சிங் பணம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை கேட்பதற்காக பேரின்பராஜ் சுவாமியார் மடம் சென்ற போது அங்கு முளவிளையை சேர்ந்த 4 பேர் பைக்கில் வந்து பேரின்பராஜை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் வருகிற ஜன.25 அன்று தொடங்கி பிப்.04 வரை பத்து நாட்கள் 8-ஆம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தக திருவிழா நடைபெறும் பத்து நாட்களுக்கு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளன.

வெம்பக்கோட்டை அருகேயுள்ள கீழக் கோதை நாச்சியார்புரம் பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது வெள்ளை மருது 33, என்பவர் தனது வீட்டுக்கு அருகில் தகர செட் அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பட்டாசுகள், மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்க்கண்ட தகுதியுள்ள சிறப்புப் பிரிவைச் சார்ந்த (SC/ST) பயனாளிகள் அருகில் உள்ள இ- சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சமூகநல அலுவலக 04575-240426 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் துறையூரில் இயங்கி வரும், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒரு வழக்கு பணியாளர் (case worker) காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள், சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.