Tamilnadu

News January 8, 2026

மாநில அளவில் பதக்கம் வென்ற கும்மிடிப்பூண்டி மாணவர்

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் சேர்ந்த நகிலேஷ் 14,17, 19 வயதுக்குட்பட்ட பாரதியார் தின, குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகளில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஜூனியர் சிலம்பாட்டத்தில் பல சுற்றுகளின் முடிவில் வெற்றி பெற்றுவெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவரை பாராட்டும் வகையில் கிராமத்தினர் பேனர் வைத்து வெற்றியை கொண்டாடினர்.

News January 8, 2026

திருப்பத்தூர்: பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றி புகாரளிக்க!

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜன.8) பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. நாளை (09-01-2026) ரேசன் கடை ஊழியர்களுக்கு வேலை நாள் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் திருப்பத்தூர்- 9445000190, நாட்றம்பள்ளி- 9445796417, வாணியம்பாடி- 9445000191, ஆம்பூர்- 9445796410 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

News January 8, 2026

திருச்சி: கூட்டுறவு பணியாளர் நாள் கூட்டம் அறிவிப்பு

image

கூட்டுறவு துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான, பணியாளர் நாள் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நாளை (ஜன.9) நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

BREAKING சிவகாசி தொழிலாளிக்கு 82 ஆண்டுகள் சிறை

image

சிவகாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரை
சித்தப்பா முறையான தாயின் தங்கை கணவர் ஓரண்டாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு கடந்த 2021-ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீவி.,போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 4 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் என 82 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

News January 8, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் வலைதளத்தில், தங்களது மகன் அல்லது மகளுக்கு வரன் பார்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும், பல போலியான நபர்கள் போலியான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை பதிவு செய்து உங்களை ஏமாற்றி உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

News January 8, 2026

ராமேஸ்வரம்-தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

ராமேஸ்வரம் – தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் வண்டி எண் (06105 / 06106) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக வரும் ஜன.13, 14 ஆகிய இரண்டு நாட்களில் கூடுதலாக 2 பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. 3 ஏசி பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான 1 இரண்டாம் வகுப்பு பெட்டி 1 லக்கேஜ் பெட்டி ஆகும்.

News January 8, 2026

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.08) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News January 8, 2026

ரூ.12 கோடி மதிப்பிலான ரிசர்வ் சைட் மீட்பு

image

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52-வது வார்டு பீளமேடு புதூர் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பிலான மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் கடந்த 2005 ஆம் ஆண்டு குடியிருப்புகளாக மாற்றி கிரையம் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் நேற்று ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடம் மீட்கப்பட்டது.

News January 8, 2026

திருவள்ளூர்: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பிரச்னையா?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 8, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!