India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று (ஏப்ரல் 15) வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வருகிற 22ஆம் தேதி பகல் 11 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி முகாம் மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் பகல் 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஓவியம், பேச்சு கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் 9047817614 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவுசெய்யலாம்.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய ஏரியாக திகழ்வது புழல் ஏரி. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 2808 மில்லியன் கன அடியாக உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 215 கன அடி வந்து கொண்டிருக்கிறது. தற்போது தேவையான அளவில் நீர் இருப்பு உள்ளதால் இந்தாண்டு குடிநீர் பிரச்னை வராது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரியை கையில் ஏந்தி எப்படி வாக்கு சேகரித்த அவர் தனக்கு வாக்களிப்பவர்கள் எந்த எண்ணில் உள்ள சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களிடம் விளக்கம் அளித்து வாக்கு சேகரித்தார்.
மதுரை மக்களவைத் தொகுதிக்கான
தபால் வாக்கு பதிவுக்கு இன்றுடன் (ஏப்.16) நிறைவு பெறுவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சங்கீதா அறிவித்துள்ளார். எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள், தபால் வாக்கு செலுத்த தவறிய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இன்று மாலை 5 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து வரும் ஏப்.19 முதல் மே.31 வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரம் – மங்களூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, ஷோரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு முதல் முறையாக முழு தென்னை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்காக கோவையில் இருந்து 200 தென்னை மரங்கள் வரவழைக்கப்பட்டு அவை காய்ந்திடாமல் இருக்க மண்,உரம் மூலம் மூடப்பட்டு வேர்கள் பாதுகாக்கப்பட்டு நேற்று கொண்டுவரப்பட்டது. இவைகள் மாலத்தீவிற்கு அனுப்பப்பட்டு அங்கு நவீன முறையில் நடப்பட உள்ளது.
மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குப்பட்டது. ரூ.500 டிக்கெட்டில் 6372 பேரும், ரூ.200 டிக்கெட்டில் 2998 பேர் என மொத்தம் 9370 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முதல் டிக்கெட் வழங்கும் பணி துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் ஊராட்சியில் உள்ள தர்காஸ், தாசரிகுப்பம், சந்தகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் வயலுக்கு செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக முத்திரைகள் பேப்பர் அழியாத மை உள்ளிட்ட பொருட்களை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது,
Sorry, no posts matched your criteria.