Tamilnadu

News January 9, 2026

சிவகங்கை: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல்.!

image

திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (21). இவர் தனது சகோதரியின் தோழி பூமா (19) மற்றும் அவரது தாய் செல்வி (55) ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்புவனத்திற்கு சென்றார். வடகரை ஆற்றுப்பகுதியில் சென்றபோது, மதுரை வண்டியூரைச் சேர்ந்த ஜோசப் மற்றும் பிரகதீஸ்வரன் வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்து நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

News January 9, 2026

ராசிபுரத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பலி!

image

ராசிபுரம் அணைப்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(60).இவர் நேற்று மாலை, சக்திநகரில் உள்ள பேத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.பின் அங்கிருந்து பஸ் மூலம் வீட்டிற்கு செல்ல ஆண்டகலூர் கேட்டிற்கு சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த கார் லட்சுமி மீது மோதியது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News January 9, 2026

தஞ்சாவூர்: டாக்டர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு

image

தஞ்சை பரிசுத்தம் நகரைச் சேர்ந்த மருத்துவர் மணி, தனது வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி உமாவுடன் ஒரத்தநாட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர். திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 9, 2026

நெல்லை: ரூ.1.32 கோடி மோசடி; மேலாளர் மீது வழக்கு

image

தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்மேய்ப்பர் நகரில் உள்ள, வங்கிகளுக்கு பணம் நிரப்பும் நிறுவன அலுவலகத்தில் ரூபாய் 1,32,48,000 நம்பிக்கை மோசடி செய்து கையாடல் செய்ததாக அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் செல்வகுமார் என்பவர் மீது புகார் எழுந்தது. மண்டல செயல்பாட்டு மேலாளர் ஹரிஹரன் கொடுத்த புகாரில் நேற்று, தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

கரூர் போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய 3 பேர்!

image

கரூர்: புலியூர் முடக்கு சாலை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பசுபதிபாளையம் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த நவ பாரதி (28), விக்னேஷ் (24) மற்றும் லாலாபேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுகள், ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

திண்டுக்கல் பிரபலம் காலமானார்!

image

சத்திரப்பட்டியைச் சேர்ந்த முதுபெரும் காந்தியவாதி மா. வன்னிக்காளை (வயது 90+) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். காந்தியக் கொள்கைகளைப் பரப்பி வந்த இவரது சேவையைப் பாராட்டி கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு ‘சிறந்த காந்தியவாதி’ விருது வழங்கி கௌரவித்தது. அவரது மறைவையொட்டி, சத்திரப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News January 9, 2026

திருப்பத்தூர் மக்களே வந்தது மிக முக்கிய எண்கள்!

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (09-01-2026) ரேசன் கடை ஊழியர்களுக்கு வேலை நாள் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் திருப்பத்தூர்- 9445000190, நாட்றம்பள்ளி- 9445796417, வாணியம்பாடி- 9445000191, ஆம்பூர்- 9445796410 எண்ணிற்கு தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. SHARE

News January 9, 2026

பொங்கல் பரிசு – ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பாக பொங்கலை கொண்டாடிட 15 பொது விநியோக நியாயவிலை கடைகளில் 4,98,028 குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, சேலை வேஷ்டி, முழு கரும்பு உட்பட ரூ.3000 வழங்கப்பட உள்ளது. இதனை 14.01.2026 வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வரிசையில் நின்று அமைதியான முறையில் பெற்றுச் செல்ல வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

புதுக்கோட்டை: மயங்கி விழுந்தவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அடுத்த கொடகுடி கண்மாய் அருகே நேற்று முந்தினம் ராக்காயி(50) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக கொடக்குடி கண்மாய் அருகே மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரில் கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

வேலூர் சாலையில் சிதறின மூட்டைகள்; அடுத்தடுத்து விபத்து!

image

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.8) மாலை சிமெண்டு மூட்டைகளை ஏற்றி சென்ற மினி வேன் சாலை நடுவே உள்ள தடுப்புக்கம்பியின் மீது மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதனால் மினி வேனில் இருந்த சிமெண்டு மூட்டைகள் சாலையில் சிதறின. உடனே பின்னால் வந்து கொண்டிருந்த கார், கவிழ்ந்து கிடந்த மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

error: Content is protected !!