Tamilnadu

News January 9, 2026

கடலூர்: வயலில் கிடந்த பிணம்!

image

திட்டக்குடியில் இருந்து கோழியூர் செல்லும் சாலையில் உள்ள விளைநிலத்தில் நேற்று 45 வயதுடைய ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த திட்டக்குடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் செவ்வேரி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி அருள்முருகன்(45) என்பது தெரியவந்தது. மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 9, 2026

தாரமங்கல்: கல்யாண ஆசை காட்டி பணத்தை சுருட்டிய பெண்!

image

தாரமங்கல் அருகே ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு, டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்பெண் இவரைத் திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார். மேலும் ‘CMC Global App’ என்ற பணத்தை முதலீடு செய்தால் பல கோடி வருமனாம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி 70 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளார். சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

News January 9, 2026

குமரி: பைக் மோதி விபத்து; 3 பேர் காயம்..!

image

புதுக்கடை அருகே முன்சிறை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் தனது மகனுடன் பைக்கில் உணவு வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் விமல்ராஜ் பைக் மீது மோதியது. இதில் விமல் ராஜ், விஷ்ணு உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

தேனி: தவறி விழுந்து இளைஞர் பலி..!

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சணன் (28). கொத்தனாரான இவருக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென வலிப்பு ஏற்பட்டு சுதர்சணன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில்படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு.

News January 9, 2026

வேலூர்: மது பாட்டில் பதுக்கல்; இருவருக்கு காப்பு!

image

பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் நேற்று (ஜன.8 ) போலீசார் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த விஸ்வா (27) மற்றும் லட்சுமணன் (24) ஆகியோரிடம் இருந்து 90 கர்நாடக மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News January 9, 2026

அறிவித்தார் காஞ்சி கலெக்டர்!

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை Laboratory Technicians & TB Health Visitors (TBHV) ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படிவத்தை <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஜன.23 அன்று மாலை 05.45 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என காஞ்சி கலெக்டர் அறிவித்துள்ளார். ஷேர்!

News January 9, 2026

அறிவித்தார் காஞ்சி கலெக்டர்!

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை Laboratory Technicians & TB Health Visitors (TBHV) ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படிவத்தை <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஜன.23 அன்று மாலை 05.45 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என காஞ்சி கலெக்டர் அறிவித்துள்ளார். ஷேர்!

News January 9, 2026

மதுரையில் இலவச தையல், மொபைல் பழுதுநீக்கப் பயிற்சி

image

மதுரை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் ஒரு மாத கால இலவச தையல் மற்றும் அலைபேசி பழுதுநீக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது. பெண்களுக்கான தையல் பயிற்சியில் கவுன், ஜாக்கெட், சுரிதார் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவுக்கு 70100 41455 எண்ணில் அழைக்கலாம்.

News January 9, 2026

தென்காசி: ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு..

image

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயினைப் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார்பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

தென்காசி: ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு..

image

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயினைப் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார்பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!