India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கணேசன் மகன் அபிதரன்(24). இவர் மதுரை ஒத்தக்கடையில் பண்னை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதை விட சிறந்த வேலை தேடி வந்தார் ஆனால் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டவர். திருமங்கலத்தில் லாட்ஜ் ஒன்றில் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களை மிரட்டி, இடையூறு செய்த அசோக்குமார், வெங்கடேசன், முருகன் மற்றும் சிவா ஆகிய 4 இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான சோதனையில் இவர்கள் பிடிபட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. இதனால், 4பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.

ஓசூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற புகைப்படக் கலைஞர் ஸ்டாலின் (22), ஆட்டோ மோதி உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில், சாமல்பள்ளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி வெங்கடேசன் (22), கார் மோதி பலியானார்; அவருடன் சென்ற சந்தோஷ் காயமடைந்தார். இந்த விபத்துகள் குறித்து அட்கோ மற்றும் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

திருவள்ளூர்: உருவ படம் திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பங்கேற்றிருந்தனர். அப்போது, மேடையில் ஏறிய தொண்டர் ஒருவர், தனது மகளுக்கு பிறந்தநாள் எனக்கூறி திருமாவளவனை கேக் வெட்ட அழைத்துள்ளார். அப்போது, ”இது துக்க நிகழ்வு, சற்று பொறுங்கள். பிறகு வெட்டலாம்” எனக் கூறியதால், ஆத்திரமடைந்த தொண்டர் கேக்கை தூக்கி அடித்துவிட்டுச் சென்றார். இதனால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மதுரை திருமங்கலம் அடுத்த பன்னிக்குண்டு சேர்ந்த காசி 60. விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மன விரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அத்தாணியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(17) ஐடிஐ மாணவர் ஆவார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் வளைவில் திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலுக்குள் விழுந்தது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் – மதுரை சாலையில் உள்ள மடத்தூர் மேம்பாலத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சிப்காட் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கீழச்செக்காரக்குடியை சேர்ந்த சமையல் மாஸ்டர் சேரந்தையன் (52) என்பது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.9) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய், பிராய்லர் கோழி 190 ரூபாய், ஆட்டுக்கறி ஒரு கிலோ 760 ரூபாய் என விற்பனையாகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 760 ரூபாய், வவால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
Sorry, no posts matched your criteria.