India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் தலைமையில், தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, பிரச்சார வியூகங்களை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமுர்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஈரோடு மக்களவை தேர்தலில் திமுகவே நேரடியாக களமிறங்கவுள்ளது. இந்த முறை ஈரோடு தொகுதியில் பிரகாஷ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நகரக் கிளை சார்பில் எழுத்தாளர் சி.பாலையா எழுதிய ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா’ என்ற நூல் வெளியீட்டு விழா மூட்டாம்பட்டி ராஜூ தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி நூலை வெளியிட்டு பேசினார். நானிலம் ஆசிரியர் மணிமொழி உள்ளிட்டோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக நகரச்செயலாளர் அடைக்கலம் வரவேற்றார்.
2024 மக்களவை தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக ஆ.ராசா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை திரண்ட எம்.புதூர் பகுதி மக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி மீது பொய் வழக்கு பதிவு செய்வதையும் அது மட்டும் இன்றி அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவலில் கைதி செய்ய போவதாக தகவல் வந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம், என்றனர்.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இவர் பாஜகவில் இணைந்துள்ளதால், திமுக சார்பில் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தருமபுரியில் களங்மிரங்குவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.செந்தில்குமார் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பழனி மாணிக்கம் வெற்றி பெற்று எம்பியானார். இவர் 1996, 1998, 1999, 2004, 2009 மற்றும் 2019 ஆண்டு என் 6 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2024-மக்கள்வை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வேலூரில் மீண்டும் திமுகவே களமிறங்கவுள்ளது. இந்த முறையும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.