Tamilnadu

News January 9, 2026

தேனியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு…!

image

ஆண்டிபட்டி அருகேயுள்ள தா்மத்துப்பட்டி விலக்கு பகுதியில் பால்ராஜ் என்பவா் டீக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடை அருகே பாப்பம்மாள்புரத்தை சோ்ந்த செல்வி என்பவா் மாட்டுத் தீவனக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பால்ராஜ், செல்வி ஆகியோரது கடைகளின் பூட்டை உடைத்து ரூ.98,000 மற்றும் 5,000 மதிப்பிலான பொருள்கள் திருபட்டன. இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News January 9, 2026

குமரியில் 9ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்..!

image

நாகர்கோவில் கலுங்கடியை சேர்ந்தவர் நிகாஷ் (15). இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நித்திஷ் என்பவருக்கு புத்தகம் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சேர்ந்து தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதுகுறித்து நிகாஷ் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் நேற்று (ஜன.8) வழக்குப்பதிந்து ஹரிஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

News January 9, 2026

பெரம்பலூர் காவல்துறை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மட்டத்தில் சில வாட்ஸாப்ப் குழுக்கள், முகநூல் பக்கங்களில் புதிதாக வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருசக்கர வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணியாதவர்கள், வாகன உரிமம் இல்லாத வண்டிகள் ஆகியவற்றை, பறிமுதல் செய்வதாகவும் அபராதம் ரூ.2500 செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் வழங்கப்படும், என்ற தவறான செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News January 9, 2026

நீலகிரி: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

image

நீலகிரி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).

News January 9, 2026

மதுரையில் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை திடீர்­ந­கர் சட்­டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் சோழவந்தான் ஆசாரி தெரு முத்துராமன் மகன் வரதரா­ஜன் என்­ப­வருக்கு குற்ற வழக்கு நிலு­வை­யில் உள்­ளது. இந்த வழக்கு தொடர்­பாக நீதிமன்­றத்தில் நடந்து வரும் விசா­ர­ணைக்கு தொடர்ந்து ஆஜரா­கா­மல் இருந்து வருவதால் அவரை மதுரை
குற்­ற­வியல் நீதித்துறை நடு­வர் நீதிமன்­றம் தேடப்­படும் குற்­ற­வா­ளியாக இன்று அறி­வித்துள்­ளது.

News January 9, 2026

தஞ்சாவூர்: கல்லூரி மாணவர் தற்கொலை

image

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த மதன்பாபு(20) என்பவர், தஞ்சாவூர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு படித்தார். இந்நிலையில், கல்லூரிக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால், அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 9, 2026

அரியலூர்: 2.51 லட்ச குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

image

அரியலூர் மாவட்டத்தில், ரேஷன் அட்டையாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் ஜன.8 தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, ரூ.3,000 ரொக்கம், விலையில்லா வேட்டி, சேலைகள் மற்றும் பரிசுத் தொகுப்புகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் 481 நியாய விலைக்கடைகளில் 2,51,161 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

News January 9, 2026

கோவை: பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இனி What’s App-ல்

image

கோவை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். (ஷேர் பண்ணுங்க).

News January 9, 2026

தூத்துக்குடி: லாரி மீது பைக் மோதி மின்வாரிய ஊழியர் பலி.!

image

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (21). மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று திருநெல்வேலி சென்றுவிட்டு காலையில் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வாகைகுளம் அருகே வந்தபோது முன்னால் சென்று காெண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இவரது பைக் மோதியது. விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News January 9, 2026

தேனி: தேவாரத்தில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

image

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையின் 24-வது முகாம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஜன.10) நடைபெறவுள்ளது. முகாமில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், காசநோய், தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும். எனவே, அப்பகுதி மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!