Tamilnadu

News July 3, 2024

நெல்லை: ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

image

மாஞ்சோலை விவகாரத்தில், அந்த மக்களுக்கு ஆதரவாக ஜூலை 6 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக, புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று(ஜூலை 3) பேட்டியளித்துள்ளார். அப்போது, மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் என்றும், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News July 3, 2024

வைகை அணையில் 3 மாவட்ட ஆட்சியர்கள்

image

வைகை ஆணையில் இருந்து விவசாயத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள். மேலும், இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News July 3, 2024

மாவட்ட சுகாதார அலுவலருக்கு விருது

image

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக மருத்துவ சேவை ஆற்றி தாய் இறப்பு சதவீதத்தை குறைத்தற்காக தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வனுக்கு தமிழக அரசு விருது சான்றிதழ் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News July 3, 2024

கரூர் ஆட்சியர் முக்கிய தகவல்

image

கரூர் ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வரை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News July 3, 2024

பழைய குற்றாலத்தில் 8 மணி வரை குளிக்க அனுமதி

image

பழைய குற்றாலத்தில் இரவு 8 மணி வரை குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். விபத்தைத் தவிர்ப்பதாக, பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வனத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 3, 2024

எஸ்.பி. தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (ஜூலை 3) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 3, 2024

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

சென்னையின் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் திசையின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூலை 9ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மழையின்றி காணப்படுகிறது.

News July 3, 2024

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

image

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மாணவர்களை வரவேற்று இனிப்புகளை வழங்கினார். இதில், அனைத்து துறையை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

News July 3, 2024

பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டம் குறித்து ஆலோசனை

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட  முதியோர் நலக் குழு உறுப்பினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

News July 3, 2024

கோவை: பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி 

image

கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல பெண்களிடம் சிறு, சிறு பணிகளை வழங்கி அவர்களுக்கு பண ஆசையை வரவழைத்து கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளது GMR GROUP என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயலி மூலம் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கோவையில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று  மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

error: Content is protected !!