Tamilnadu

News January 10, 2026

கரூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கரூர் மாவட்டம், கடவூர் அருகே சுருமன்பட்டி சாலையில், ரமணா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இது குறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவு மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றனர்.

News January 10, 2026

சேலம் அருகே அதி பயங்கர விபத்து: 3 பேர் பலி!

image

சேலம்: நங்கவள்ளி டூ ஜலகண்டாபுரம் செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இடைப்பாடியை சேர்ந்த மோகன் குமார் (20), சஞ்சய்பாரதி (20), சரக்கு ஆட்டோவில் வந்த, மேச்சேரி செட்டிக் காரச்சியூரை சேர்ந்த விமல் (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து நங்கவள்ளி போலீசார் விசாரணை

News January 10, 2026

தஞ்சையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

image

தஞ்சாவூரில் அமைந்துள்ள மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரியில் இன்று (ஜனவரி 10) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணியளவில் தனியார் துறையை சார்ந்த பல நிறுவனங்கள் வருகை புரிந்து நேர்காணல் மூலமாக நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

தி.மலை: கொடூரனுக்கு வாழ்நாள் சிறை

image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் பழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (38) என்பவர், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தி.மலை POCSO நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று (09.01.2026) தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

News January 10, 2026

திண்டுக்கல்லில் மது கடைகள் மூடல்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 16.01.2026 திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் எப்.எல். உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும். அன்றைய தினங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

ராணிப்பேட்டை, பெரும்புலிப்பாக்கம் பகுதியில் நேற்று (ஜன.9) கார், வேன் என மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்னை பூந்தமல்லி வரதராஜபுரத்தைச் சேர்ந்த தீபக் என்ற டிரைவர் சம்பவத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

குமரி மாவட்டத்தில் 72 காவலர்களுக்கு பணியிடமாற்றம்

image

குமரி மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி செய்த போலீசாருக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் அடிப்படையில் ஆயுதப்படையில் வைத்து மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்று (ஜன-9) நடைபெற்றது. இதில் 72 போலீசாருக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கவுன்சிலிங் முறையில் பணியிடமாற்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் -ஆல் வழங்கப்பட்டது.

News January 10, 2026

சென்னை: மெட்ரோ பனியால் துடிதுடித்து பலி!

image

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் (22), போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, மதுரவாயல் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பணிக்கான பிரம்மாண்டமான கிரேன் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மெட்ரோ பணிகளுக்காக சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், உபகரணங்கள் மீது முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

News January 10, 2026

மதுரையில் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

News January 10, 2026

மதுரையில் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!