India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தென்காசி, குமரி, கோவை, தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இன்று மாலை 5 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பழனி இன்று (ஏப்ரல் 21) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வேலுார் விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (72). இவர் கடந்த 10ம் தேதி சமையல் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியது இதில் காயமடைந்த ருக்மணியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி நேற்றிரவு (ஏப்ரல் 20) இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது முன்னதாக யாக கலச பூஜைகளுடன் மேளதாளங்கள் முழங்க கலசநீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உதகை , மசினகுடி இடையே கல்லட்டி மலைப்பாதை உள்ளது . செங்குத்தான சாலையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி வெளியூர் வாகனங்கள் விபத்து ஏற்படுகின்றன . மசினகுடியில் இருந்து இன்று (21 தேதி ) காலை 10 மணியளவில் உதகைக்கு வந்த சுற்றுலா வாகனம் சீகூர் பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களும் ஏற்படவில்லை.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலில் இறைப்பணி செய்து வந்த ராஜேஸ்வரி என்னும் யானை மறைந்து இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது. அதன் நினைவிடத்தில் 6வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சேலம் மேயர் இராமச்சந்திரன் இதில் பங்கேற்று யானைக்கு மலரஞ்சலி செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2024 மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த மார்ச் 16 முதல் ஏப்ரல் 20 வரை சேலத்தில் ரூ.1.78 கோடி பணம் மற்றும் ரூ.1.09 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த பீடித் தொழிலாளி ஸ்டெல்லாவின் மகள் இன்பா சிவில் சர்வீஸ் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இன்று அவரை சிபிஐ எம்எல் மற்றும் தென்காசி மாவட்ட ஜனநாயக பீடி தொழிலாளர் சங்கம் சார்பாக தென்காசி மாவட்ட செயலாளர் புதியவன் (எ) சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டினர்.
பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் மனநல சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு, இன்று காலை உணவினை தன்னார்வலர் இன்சூரன்ஸ் பால்ராஜ் குடும்பத்தின் சார்பில் பரிமாறினர். இந்நிகழ்வின் போது, நூலக ஆர்வலர் அன்புக்கரசன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு, உணவினை பரிமாறினர். இதற்கு அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக, வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் செயின்ட் ஜான் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் National Defence Academy and Naval Academy and Combined Defence Services Examination (I) 2024 ஆகிய தேர்வுகள் நடைபெறுவதை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.