Tamilnadu

News April 21, 2024

நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கிடையாது

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது உண்டு.
இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாளை ( ஏப்.22 ) திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

நீலகிரியில் தீவிர சோதனை

image

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் நீலகிரி சோதனைச் சாவடிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா வரும் பயணிகளிடம் பறவை காய்ச்சலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

News April 21, 2024

மாட்டு வண்டிக்கார ர் அடித்து கொலை

image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் மாதா கோயில் பகுதியில் சேர்ந்த அருண்ராஜ்(41 ) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாளன், சங்கர் ,ரமேஷ் உள்ளிட்டோருக்கு இடையே முன்விரோதம் இருந்து கட்டையால் தலையில் தாக்கியதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு லால்குடி போலீசார் விசாரணை

News April 21, 2024

விருதுநகரில் மின்தடை

image

விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், மேலரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

News April 21, 2024

நாமக்கல்லில் மது விற்பனை ஜோர்

image

நாமக்கல்லில் இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி, டாஸ்மாக் கடை விடுமுறையால் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய அதிகளவில் மது பாட்டில்கள் வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.இதனால், விடிந்ததும், ‘குடி’மகன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு கைகலப்பும் ஏற்படுகிறது. மேலும் இதுகுறித்து ப.வேலுார் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

News April 21, 2024

சிதம்பரத்தில் ஓட்டு சதவீதம் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான ஓட்டு சதவீதம் என்பது 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சிதம்பரத்தில் 76.37 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2024

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் ஒரே சம சீதோஷ்ண நிலை ஏற்படுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர். இதனால் படகு சவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

News April 21, 2024

திருச்சி: மறு வாக்குப்பதிவு கிடையாது!

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கை வயல் பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேங்கை வயல் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அதனால் ஒரு சிலர் மட்டுமே வாக்களித்தனர்.இந்நிலையில், மீண்டும் வேங்கை வயலில் மறு வாக்குப்பதிவு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

அரியலூர் அருகே விபத்து: பலி

image

அரியலூர் அருகே செட்டி திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி; தனது  மனைவி செல்வம்பாளுடன் பைக்கில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.  கடுங்காலி கொட்டாய் அருகே சென்றபோது, பின்னால் நெய்வேலியை சேர்ந்த இசக்கிமுத்து ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.  

News April 21, 2024

கோவில்பட்டி : 2மணி நேரத்தில் விற்று முடிந்த இளநீர்

image

கோவில்பட்டியில் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் இருந்து தினசரி இளநீர் கோவில்பட்டிக்கு வரத்து உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. இன்று காலை 7மணிக்கு வந்த இளநீர் 9மணிக்குள் விற்று முடிந்தது. ஒரு இளநீர் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்கப்படுகிறது. இளநீர் வண்டியில் இருந்து இறங்கும்போதே மக்கள் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.

error: Content is protected !!