India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தில் இம்மாதம் 7ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் பதிவு செய்தல் ஆதார் திருத்தம் ஆகியவற்றுக்கான சேவை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. பள்ளி மற்றும் பணிக்கு செல்வோர் நலன் கருதி செயல்படுத்தப்படும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள தூத்துக்குடி கோட்ட கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேளாங்கண்ணி, திருவாரூர், திருத்துறைபூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகளை தொடங்கிட வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து நாகை எம்பி வை.செல்வராஜ் கோரிக்கை மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்
வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்தக் கலந்தாய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்தை முற்றுகையிட்டு இன்று (ஜூலை 3) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் குடும்பம், பண பரிமாற்றம், இடப்பிரச்சனைகள் குறித்த 72 மனுக்கள் மீது மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்று மனுக்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதோடு 59 மனுக்களுக்கு சுமூக தீர்வும், 13 மனுக்கள் மீது மேல்விசாரணை நடத்தவும் அந்தந்த காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
உலக நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
தினத்தை முன்னிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் திருவண்ணாமலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. SP அலுவலக உதவி எண் 94429-92526, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04179-221104, தனி பிரிவு அலுவலக உதவி எண் 04179-221103, போதைப்பொருள் குறித்து இரகசிய தகவல் அளிக்க 91599-59919, மூத்த குடிமக்கள் உதவி எண் 94862-42428, SP அலுவலக முகாம் உதவி எண்
04179-221105 ஆகிய எண்ணிற்கு மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இன்று ( ஜூலை 3 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார்களை டி.ஓ. பென்ஷன் அதலாத் என தபால் உறையின் மீது எழுதி கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேரும்படி வருகின்ற 8ஆம் தேதிக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.