India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் கூல் பிரண்ட்ஸ் நண்பர்கள் சங்கம் இப்பகுதியில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் பொதக்குடி சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் தர்ப்பூசணிப்பழம், ஐஸ் மோர் ரோஸ்மில்க் போன்ற குளிர் பானங்களை வழங்கினர்.
பழவேற்காடு: கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட மீன்பிடி வலைகள் நேற்று அதிகாலை மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இந்த விபத்தில் மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுவை வில்லியனுார் ஆரியப்பாளையம் புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை நான்காம் கால பூஜை, யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10:05க்கு புட்டலாய் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில் திருக்கல்யாண மேடையில் மணமகள் கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முத்து கொண்டை, மாணிக்க மூக்குத்தி, தங்கச்சடை, நலப்பதக்கம், பச்சைக்கல், மரகதப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார். பல்வேறு அலங்காரத்தில் மணக்கோலத்தில் வீற்றிருந்த மீனாட்சியம்மனுக்கு வைர மாங்கல்யம் அணிவித்தார் சுந்தரேஸ்வரர்.
கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29). கர்ப்பிணியான பூமணிக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூமணிக்கு பிரசவ வலி அதிகமானது. எனவே 108 வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி மருத்துவ உதவியாளர் பூமணிக்கு பிரசவம் பார்த்தார். இதில் பூமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடலூர் சட்டமன்ற தொகுதியில் 2,41,751 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 80,340, பெண் வாக்காளர்கள் 84,819, மூன்றாம் பாலினத்தினர் 37 பேர் என மொத்தம் 1,65,196 பேர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தனர். அந்த வகையில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் 68.33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் செவடமுத்து. சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். ஊத்துக்குளியிலிருந்து நூல் மில்லுக்கு தேவைப்படும் கழிவு பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. வேனை திருவாரூரைச் சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டிவந்தார். வெள்ளகோவில் காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மின் கம்பியில் உரசி எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.
காட்பாடி லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று (ஏப்ரல்.21) ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 40 வயதுதக்க நபர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டனர்.
தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் 23-ம் தேதி சித்திரை முழு நிலவு விழா நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்காக தேனி ஆட்சியா் ஷஜீவனா நேற்று (ஏப்.21) கண்ணகி கோயிலுக்குச் சென்றாா். அங்கு கோயிலை சுற்றி பாா்த்து ஆய்வு செய்தாா். பின்னா், இந்து அறநிலையத் துறை மூலம் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், கூடலூா் சாா்பில் செய்யபட வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அருகே ஆதனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், விக்னேஷ் கொக்கு மருந்து சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்.22) உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.