Tamilnadu

News January 10, 2026

நெல்லை: 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்

image

V.K.புரத்தைச் சேர்ந்த சலீம் என்ற மாணவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன மாணவனை இரவு 9 மணிக்குள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறைக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.

News January 10, 2026

திருவள்ளூரில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

image

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த டோல்கேட்டில் இன்று(ஜன.10) தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வட்டார பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

News January 10, 2026

கரூர்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

நாமக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 10, 2026

சேலம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 10, 2026

திருவள்ளூருக்கு மெட்ரோ ரயில் வந்தாச்சு!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி – போரூர் இடையே உள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 10 கி.மீ தூரத்திற்கு ரயிலை இயக்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தற்போது வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி – போரூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 10, 2026

திருப்பத்தூர்: பொங்கல் பரிசு மெசேஜ் வந்தால்..,உஷார்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘பொங்கல் பரிசு, பொங்கல் வாழ்த்து, பொங்கல் சலுகைகள் என்று அரசின் பெயரிலோ முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம்’ என அறிவித்துள்ளது. உங்களுக்கு அப்படி மெசேஜ் வந்தால் 1930-வை அழைக்கவும்.(SHARE)

News January 10, 2026

தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று ஜன.10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

காஞ்சிபுரத்தில் தென்பட்ட அரிய பறவை!

image

காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் எல்லைக்குட்பட்ட மின் நகர் பகுதியில் வீட்டினுள் இருந்த வெளிநாட்டு ஆந்தையை மீட்டனர். ஆந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதால் உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்தவுடன் வெளிநாட்டு ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

News January 10, 2026

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

திருநெல்வேலி – ஷிமோகா (06103/06104) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் நாளை (ஜனவரி 11) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 11:55 மணிக்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி வழியாக ஷிமோகா சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

error: Content is protected !!