India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (59). இவரது மனைவி கடந்த 4-ம் தேதி இறந்து போனார். தாயார் இறந்துபோன மனவேதனையில் இருந்த வெங்கடேசனின் மகன் சந்தோஷ்குமார் (33) நேற்று தூக்குபோட்டு கொண்டார். பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வர் ஆலய வளாகத்தில் இம்மாதம் 15 மற்றும் 16-ம் தேதி இரண்டு நாட்கள் மாலை ஐந்து மணி முதல் 8 மணி வரை பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன்படி கரகாட்டம், நையாண்டி மேளம், குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் பொங்கல் பரிசு, பொங்கல் வாழ்த்து, பொங்கல் சலுகைகள் என்று அரசின் பெயரிலோ, முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் மோசடியிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டிக்கு, ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பேருந்தில் நேற்று நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பேருந்தில் 819 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பேருந்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துக்கு ரூ.40,000 அபராதம் விதித்தனர்.

குமரி மாவட்டம், உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (60). இவர் நேற்று முன் தினம் முட்டை விற்பதற்காக உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று உள்ளார். அப்போது முதலார் பகுதியை சேர்த்த ஜெனிஸ் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி உள்ளது. இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் போரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். நேற்று முன் தினம் கம்பம் பகுதியில் பாதயாத்திரை சென்ற பொழுது வீரபாண்டியன் என்பவர் ஓட்டி வந்த கார் திருநாவுக்கரசர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் தெற்கு போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிந்து விசாரணை.

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 4,663 ச.கி.மீ
2. மொத்த மக்கள்தொகை: 16,18,345 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 6
4. பாராளுமன்ற தொகுதி: 4
5. வருவாய் கிராமங்கள்: 763
6. ஊராட்சி ஒன்றியங்கள்: 13
7. வட்டங்கள்: 12
8. பேரூராட்சிகள்: 8
9. மாநகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (10-01-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ. 142- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.90- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக நீடித்து வருகிறது. முட்டையின் தேவை குறைந்துள்ளதால் முட்டை விலை படிப்படியாக சரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.