Tamilnadu

News January 11, 2026

அரியலூர்: DSP பணியிடமாற்றம்

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த ரவி சக்கரவர்த்தி, கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் டிஎஸ்பி ஆக பணி ஆற்றி வந்த பலர், டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி பணி மாறுதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 11, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இலை வளையமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கி விண்ணப்பப் பதிவு நடைமுறை இணையதளம் மூலம் https://tanfinet.tn.gov.in நடைபெறுகிறது. இதற்கு வருகின்ற ஜனவரி 14 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு கேட்ட மனைவிக்கு அடி உதை!

image

கள்ளக்குறிச்சி: மல்லாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மனைவி அமுதாவிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மாரிமுத்து முதலாவதாக சென்று பொங்கல் பரிசு ரூ.3000 வாங்கிவிட்டார். இது குறித்து அமுதா கேள்வி எழுப்பியபோது ஆத்திரமடைந்த மாரிமுத்து அமுதாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அமுதா போலீசில் புகார் அளித்த நிலையில், மாரிமுத்துவை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News January 11, 2026

தூத்துக்குடி போலீஸ் உயர் அதிகாரிங்கள் டிரான்ஸ்பர்

image

தமிழகத்தில் 88 போலீஸ் டிஎஸ்பிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய டி.எஸ்.பியாக சுனில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மணியாச்சி DSP S.அருள் இடமாற்றம் செய்யப்பட்டு K.அஜூகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விளாத்திகுளம் DSP P.அசோகன் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய DSPயாக M.சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டுளார்.

News January 11, 2026

சென்னை: இளம்பெண் மயங்கி விழுந்து பலி!

image

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் தீபிகா ஹரிஸ் (37). வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர். இவர் நேற்று முன்தினம் காலை, காய வைத்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்ற போது, மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

வேலூர்: சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை – 2 பேருக்கு போக்சோ!

image

பள்ளிகொண்டா அருகே ஒருவர் இட்லிகடை நடத்தி வருகிறார். அவரது 2 மகள்களும் இவருக்கு உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில், முன்தினம் இரவு 2 மகள்களையும் காணாமல் பதறிய அவர், போலீஸிடம் புகாரளித்தார். விசாரணையில், விக்னேஷ் (19), ரசாக் (20) ஆகிய இளைஞர்கள் சிறுமிகளை வேளாங்கண்ணி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமிகளை மீட்ட போலீசார், வாலிபர்களை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.

News January 11, 2026

விழுப்புரம்: திருமண நாளன்று இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

image

விழுப்புரம்: மகாராஜபுரத்தை சேர்ந்த டேவிட், அதேபகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவருடைய மகன் ஜோப் ஜெசூரன் (32). இவர் தனது திருமண நாளான நேற்று, பைக்கில் விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து மருத்துவமனை அழைத்துச் செல்லும் பாதி வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 11, 2026

காவல்துறை மண்டல தலைவர் பொறுப்பேற்பு

image

திருச்சி மண்டல காவல்துறை தலைவராக திரு பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருவாரூர், தஞ்சை, புதுகை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவு

image

நாகை மாவட்டத்தில் வரும் ஜன.16-ம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜன.26-ம் தேதி (குடியரசு தினம்) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

News January 11, 2026

திருவள்ளூர்: மண் குவியல் எமனானது

image

வேலூர் மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு தற்காலிக ஊழியர் விவேக் குமார் (35), தனது அண்ணன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜூ பேட்டை பகுதியில் சாலை பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவேக் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!