India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவை சேர்ந்தவர் கிஷோர்(40). இவர் அரக்கோணம் யூனியன் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தீபா காஞ்சிபுரம் ஐஓபி வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் அரக்கோணம் ஜவகர் நகர் பகுதியில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று கிஷோர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்
காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் – விமலாதேவி தம்பதியரின் மகள் சாருபிரீத்தி. இவர் காரியாபட்டி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் நான்காவது இடமும், விருதுநகர் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் உள்ள நவாமரத்து பட்டியை அடுத்துள்ள எல்லைமேடு அருகே ஒட்டன்சத்திரம் நோக்கி பைக்கில் வந்த இளஞர்கள் மீது வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 2 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்காலில், இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஏரியூர், வெள்ளமன் காடு பகுதியை சேர்ந்த தம்பதி ராஜீ, வளர்மதி(55). இவர்களுக்கு 3 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்களது இரண்டாவது மகன் ரத்தினவேல், வளர்மதி யிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து, வீட்டில் இருந்த மரப் பொருட்களுக்கு தீ வைத்துள்ளார். அதனை தடுக்க முயன்ற தாய் வளர்மதியை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் பெரும்பாலை போலீசார் நேற்று ரத்தினவேலை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 258 பள்ளிகளில் 95 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 149 பள்ளிகளில் 34 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தி.மலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் இலவச கோடைகால தடகளப் பயிற்சி முகாம் வரும் மே 15 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மே 13 மற்றும் 14ம் தேதிகளில் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.