India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஜூலை 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 10 மணி வாராந்திர குறைதீர் கூட்டம் (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்) ▶️காலை 10 மணி கோட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு ▶️காலை 11மணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்▶️ மாலை 3 மணி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்ப்பு
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஓட்டக்குடி பகுதியில் வசிப்பவர் சுஜாதா (33). இவரது கணவர் பிரபாகரன் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி செல்போன் வாயிலாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுஜாதா சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழி, 2 ஆண் நண்பர்களுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் மது அருந்தியபோது, மது போதையால் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணிடம் ஆண் நண்பர்களில் ஒருவர் இவ்வாறு செய்துள்ளார். கண் விழித்து பார்த்தபோது அப்பெண் ஆடை இல்லாமலும், பிறப்பு உறுப்பில் காயத்துடனும் இருந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தோழி, ஆண் நண்பரை கைது செய்தனர்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் மயிலாடுதுறையை சேர்த்தவர் ஆவார். மேலும் இவர் கல்கி என்ற புனைப்பெயரால் மிகவும் பிரபலமானவர். இவர் எழுதிய பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற புத்தங்கங்கள் மூலம் இன்றளவும் பலராலும் அறியப்படுகிறார். மேலும் இவர் இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர் என்று கூறப்படுகிறது. பகிரவும்
ஈரோடு வீரப்பன் சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் தமிழ்ச்செல்வன் (31), இவரது வீட்டின் அருகில் தனியாக இருந்த மாணவியை கத்தியை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit
பாவூர்சத்திரம் கீழப்பாவூர் விலக்கு, காமராஜர் தினசரி சந்தை ஆகிய இரண்டு இடங்களில் மனமகிழ் மன்றங்களை திறப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை கண்டித்து நேற்று காமராஜர் சிலை முன்பு நேற்று ஏராளமானோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கிக் கணக்கில் வரும் பணத்திற்கு கமிஷன் தருவதாக யாராவது கேட்டால், அதனை நம்பி வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களுடைய பெயரிலான வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுவதால், மோசடியில் உங்களுக்கும் தொடர்பு உடையதாக கருதப்படும் என எச்சரிக்கை. SHARE IT
திண்டிவனம் வட்டம், ரெட்டணை அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டுக்குட்டிகளைத் தாக்கிய மர்ம விலங்கு சிறுத்தை புலி என நேற்று (ஜூலை 6) உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்டணை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இதேபோல தாக்குதல்கள் நடந்துள்ளதால், வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை புலியை பிடிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மக்களே கொஞ்சம் உஷாரா இருங்க!
கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்கை பிரிவில், 5ம் தேதி இரவு பணியில் இருந்தார். நேற்று காலை அவர். மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்ததை பார்த்த ஊழியர்கள், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.