Tamilnadu

News February 12, 2026

மெரினாவில் 300 கடைகளுக்கு குலுக்கள் முறையில் தேர்வு

image

சென்னை மெரினா கடற்கரையில் அமைய உள்ள 300 கடைகளுக்கான குழுக்கள் முறையில் தேர்வு இன்று (பிப்.12) ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் மேற்பார்வையில் நடைபெறுகிறது. 4 திட்ட பகுதிகளில் மொத்தமாக 300 கடைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு திட்ட பிரிவுக்கும் ஐந்து சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News February 12, 2026

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் (பிப்ரவரி 12) புதிய பேருந்து நிலையம் ரூ.15 கோடி செலவில் நவீன பேருந்து நிலையமாக கூடிய ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட் ஆக கடந்த மூன்றாண்டாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவு பெற்று நாளைய தினம் (பிப் 13) அன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. நீண்ட நாள் பணிக்கு பின் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதால் மக்கள் ஆர்வமாக அதை காண உள்ளனர்.

News February 12, 2026

புதுவையில் 3 பேரிடம் ரூ.1.46 லட்சம் அபேஸ்

image

முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒருவரிடம் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வங்கி அதிகாரி எனக் கூறி, கடன் வரம்பை அதிகரித்து தருவதாக லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர், அந்த லிங்கை ஓபன் செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 மாயமானது. இதேபோல் கோரிமேடில் ரூ.40,800, வைத்திக்குப்பத்தில் ரூ.15,399 என 3 பேர் ரூ.1,46,199 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

ரயில்வே தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. எனவே இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருப்புக்கோட்டை சாத்தூர் வருவாய் தோட்டங்களில் 17-02-26 அன்று முற்பகல் 11மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனிநபர் பங்கேற்று மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு காணலாம்.

News February 12, 2026

திருத்தணி: மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 12 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்ததாக லோகேஷ் (25) என்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். முகாமில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருத்தணி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 12, 2026

செங்கல்பட்டில் தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம்

image

செங்கல்பட்டில் தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செங்கல்பட்டு தொழில் பழகுநர் ஆட்சேர்ப்பு முகாம் (2025-26) TRADE APPRENTICES ENGAGEMENT FAIR (TAEF) மற்றும் பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவின்கீழ் சென்னை மண்டல அளவிலான தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை நாளை செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையம் வளாகத்தில் நடைபெற உள்ளது.

News February 12, 2026

நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி: தவெக

image

சேலத்தில் நாளை (பிப்.13) நடைபெறும் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News February 12, 2026

BREAKING: திருச்செந்தூர் மாசி தேரோட்டம் தேதி அறிவிப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா பிப்ரவரி 21ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 4ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. மார்ச் 2ம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டமும், மார்ச் 3ம் தேதி தெப்ப உற்சவமும், பல்வேறு நாள்களில் சிவப்பு, வெள்ளை, பச்சை பட்டு உடுத்தி சப்பர வீதியுலாக்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

News February 12, 2026

புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா!

image

புதுகை மாவட்டத்தில் “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி 17.02.2026 அன்று நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் வரும் 16.02.2026 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!