India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறைதீர்வு முகாம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக புதுச்சேரி துணை ஆட்சியராக இருந்த இஷிதா ரதியை நியமித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்று காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக இஷிதா ரதி பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக பதவி ஏற்று கொண்ட ஆட்சியரை பல்வேறு அரசு துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிப்.13, 14 ஆகிய தேதிகளில் திருச்சி வருகை தர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணமாக, திருச்சி மாநகரில் மேற்கண்ட தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்ப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவின், வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு முகவர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள வருகிறார். இந்த நிலையில், அதற்காக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி ட்ரோன் கேமிராக்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில், 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு ரூ.5,396 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். இதில் நிதித்துறை பொறுப்பையும் வகிக்கும் அவர், அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நித்தியதேவி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி குருபரப்பள்ளி அருகே காரை நிறுத்தி விட்டு அருகே இருந்த ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோத்தித்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் தலைவரும், உடன்குடி கிழக்கு ஒன்றியம் தி.மு.க மாவட்ட பிரதிநிதி திரு. ஜெயபிரகாஷ் அவர்களின் தந்தையாருமான திரு. எஸ்.ஜே.கயாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தூத்துக்குடி மாவட்ட எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

தினமும் ரூ.222 சேமிப்பை அஞ்சலக RD திட்டத்தில் முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் வரை கிடைக்கும் . அரசு உத்தரவாதத்துடன் கூடிய இந்தத் திட்டம், சிறிய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சேமிப்புபை வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தை தொடர்ந்து நீட்டித்தால், 10 ஆண்டுகளில் 11 லட்சம் வரை பெற முடியும். அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE IT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் Al, Food & Beverage, Apparel Designing, Cosmetology உள்ளிட்ட துறைகளில் இலவச திறன் பயிற்சி மூன்று மாதங்கள் வழங்கப்படுகிறது. 18-40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் இந்த ஆண்டு 15 சிறைவாசிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை ஆண்கள் சிறையில் 12 பேர், பெண்கள் சிறையில் 8 பேர் என மொத்தம் 45 கைதிகள் எழுத உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக மத்திய சிறையில் தேர்வு மையம் அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.