Tamilnadu

News February 12, 2026

வேலூரில் நள்ளிரவில் திடீர் தீ!

image

வேலூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று ( பிப்.11 ) இரவு தீவிபத்து ஏற்பட்டது. தீயினால் குப்பைகள் எரிந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு எரிந்து கொண்டிருந்த குப்பையை அனைத்தனர்.

News February 12, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26 கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உத்தேச ஒதுக்கீடு , திட்ட செயலாக்கத்தின்படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் வரும் 17ஆம்தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

வேலூரில் மாவட்ட நிர்வாகம் அனுமதி!

image

வேலூர் மாவட்டத்தில் மேலும் 2 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி கே.வி.குப்பம் தாலுகா பள்ளத்தூரில் இன்றும் (பிப்.12 ), கணியம்பாடியில் வரும் 16-ந் தேதியும் மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. விழா குழுவினர் 15 நாட்களுக்கு முன்பே மாடு விடும் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கோரி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 12, 2026

பள்ளிகொண்டா தொழிற்சாலையில் திடீர் தீ!

image

பள்ளிகொண்டா அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன் ( 36). நார் தயாரிக்கும் தொழிற் சாலை நடத்தி வருகிறார். நேற்று ( பிப்.11 ) இரவு திடீரென தொழிற்சாலை குடோனில் தீ எரிந்துள்ளது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 12, 2026

BREAKING விருதுநகர்: பட்டாசு ஆலையில் தீ விபத்து

image

வெம்பக்கோட்டை அருகே தெற்கு ஆணைக்குட்டம் பகுதியில் ஐயப்பா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பட்டாசு கழிவுகளை கொளுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சத்யாநகரை சேர்ந்த யேசுராஜ் (34) என்ற தொழிலாளி படுகாயமடைந்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை.

News February 12, 2026

ஓசூரில் புதிய நிர்வாக அலுவலகம் ஆய்வு

image

ஓசூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக குழு அலுவலகங்களை முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் ஓசூரின் முதல் மேயர் எஸ்.ஏ. சத்யா ஆய்வு செய்தார். அலுவலக வசதிகளை பார்வையிட்டு, சிறந்த நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான சேவைகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த முயற்சி நிர்வாக செயல்திறனை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 12, 2026

நீலகிரி : ₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் வரை பெறலாம்!

image

தினமும் ரூ.222 சேமிப்பை அஞ்சலக RD திட்டத்தில் முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளில் ரூ.4.5 லட்சம் வரை கிடைக்கும் . அரசு உத்தரவாதத்துடன் கூடிய இந்தத் திட்டம், சிறிய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பை வழங்குகிறது. மேலும், இத்திட்டத்தை தொடர்ந்து நீட்டித்தால், 10 ஆண்டுகளில் 11 லட்சம் வரை பெற முடியும். அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE IT

News February 12, 2026

கிருஷ்ணகிரியில் மனைவியை கொன்ற கொடூர கணவர்!

image

தளி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அவரது மனைவி ரூபாவை கழுத்தறுத்துக் கொலை செய்தார். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் விழைந்த இந்த கொடூர வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் நேற்று (பிப்.11) விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி சுதா, கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்த குற்றங்களுக்காக அவருக்கு ஆயுள் தண்டனையுடன், 3 ஆண்டு சிறை மற்றும் ₹6,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

News February 12, 2026

தமிழ்நாடு நாட்டுப்படகு சங்கத் தலைவர் காலமானார்

image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மனப்பாடு மீனவ கிராமத்தில் நாட்டுபடகு சங்கத் தலைவர் மற்றும் சமுதாய தலைவரான கயாஸ் இன்று இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். துக்கம் அனுசரிக்கும் விதமாக நாளை(பிப்.13) மீனவர் கிராமங்களில் யாரும் மிக பிடிக்கக் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

கோவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும்.
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!