Nagapattinam

News March 24, 2026

நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 24, 2026

நாகை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

image

நாகை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

நாகையில் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சி

image

நாகை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 3360 வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி மார்ச் 28ல் நடைபெறுகிறது.
700 வாக்குச்சாவடிகளுக்கான பணியாளர்கள் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் தேர்தல் மேற்பார்வையாளர் பர்வேஸ் அகமது சித்திக், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News March 24, 2026

நாகை: B.E படித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 24, 2026

நாகையில் இப்படி ஒரு இடமா!

image

நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பிரலபன சுற்றுலா பகுதியாக அறியப்படுகிறது. இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க சோழர்களின் துறைமுகம் மற்றும் அதன் கலங்கரை அமைந்திருந்தது. பின்னர் 2004-யில் ஏற்பட்ட சுமானியின் போது முழுமையாக பாதிக்கப்பட்டு, கலங்கரையின் எஞ்சிய பகுதிகள் மட்டுமே உள்ளது. மேலும் இங்கிருந்துதான் ராமர் இலங்கையை பார்த்ததாக இதிகாசத்தில் கூறப்படும் ராமர் நின்ற இடத்தில் அவரது பாதமும் உள்ளது. SHARE IT

News March 24, 2026

நாகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாகை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News March 24, 2026

ஒரே பதிவு எண் கொண்ட லாரிகள் – 2 இளைஞர்கள் கைது

image

ஒரே பதிவு எண்ணில் இயக்கப்பட்ட இரண்டு மண் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ராஜகுரு(26), தமிழரசன்(28) ஆகிய இருவரை கீழையூர் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் போலியான பதிவு எண் பயன்படுத்தி சட்டவிரோதமாக மண் கடத்தியது சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2026

கொலை முயற்சியில் ஈடுபட்ட போக்சோ குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை

image

நாகை மாவட்டம் குருமணாங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (எ) ரஜினி. இவர் மீது கடந்த 2025-ல் போக்சோ வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லக்கூடாது எனப் புகார்தாரரான பெண் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த கீழ்வேளூர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தார்.

News March 24, 2026

நாகை: சாலையோரத்தில் கிடந்த இளம்பெண் சடலம்

image

நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக, நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த பெண் அருகில் இருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் இருந்த முகவரியில் அவர், கோட்டூர் ஆதி சமயபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கீதா(34) என்பதும், அவர் மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு நாகை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 24, 2026

நாகை: லாட்டரி விற்பனை – ஒருவர் கைது

image

நாகை மாவட்டம் வலிவலம் அருகே சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சுபாஷ் சந்திரபோஸ்(40) போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து லாட்டரி டோக்கன்கள், மோட்டார் சைக்கிள், 3 மொபைல் போன்கள் மற்றும் ரூ.3,030 பணம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி வலிவலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து வேளாங்கண்ணி டிஎஸ்பி நிக்சன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!