India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம், அத்திப்புலியூர் ஊராட்சி பகுதி கிராமத்தில் குடிநீர் குழாய் OHT பைப்லைன் உடைந்து குடிநீர் சாலைகளில் ஓடியதை பழுது நீக்கி சரிசெய்து பராமரிப்பு பணி இன்று ஜனவரி 18 மேற்கொள்ளப்பட்டது. மேலும் கீழ்வேளூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பழுதடைந்த மற்றும் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்பட்டன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விவசாயிகளிடம் கையூட்டு பெறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.
நாகை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நாகூர் நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம், IFBS இண்டஸ்ட்டிரியல் ஃபேப்ரிகேடர்ஸ், நாகை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகிறது. நாளை 19.01.2025, ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல் 1:00 மணி வரை ஆதர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம் தோனித்துறை சாலையில் பாண்டியன் திரையரங்கம் செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்து கிடப்பதாக நாகப்பட்டினம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நாகூர் நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம், IFBS இண்டஸ்ட்டிரியல் ஃபேப்ரிகேடர்ஸ், நாகை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகிறது. நாள்: 19.01.2025, ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9:00 முதல் 1:00 மணி வரை இடம்: ஆதர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகை நகர்
குத்தாலம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எதிரில் அதிமுக அண்ணா தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ சங்க கொடி ஏற்றி வைத்தார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோடியக்கரையிலிருந்து இருந்து 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த நவ.10 ஆம் தேதி கைது செய்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரையும் கடந்த 1-ஆம் தேதி இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. இதையடுத்து அவர்கள் 12 பேரும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து நாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டனர்.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் (மதுபான) கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் தைபொங்கல் தினத்தன்று மது பாட்டில்களை வாங்கி குவித்தனர். இதன் காரணமாக கடந்த ஜன.14-ஆம் தேதி மட்டும், நாகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.5.82 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.28 லட்சம் குறைவாகும். SHARE NOW!
மத்திய மாநில அரசுகளின் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் துறை சார்பாக தேசிய பசுமை படை மாணவர்களுக்கு நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கோலபோட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பரிசுகள் வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் பாலாஜி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வாய்மேடு அடுத்த வண்டுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வெள்ளிக்கிடங்கு துளசியப்பட்டினம் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் அனைத்தும் கீழே விழுந்து நாசமாகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.