Mayiladuthurai

News July 26, 2024

மயிலாடுதுறை மார்க்கமாக சிறப்பு ரயில்

image

தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக திருச்சி வரை செல்லக்கூடிய சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இன்று இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறைக்கு நாளை ஜூன் 27 அதிகாலை 3.55 மணிக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

News July 26, 2024

மயிலாடுதுறையில் நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

image

மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மயிலாடுதுறையில் நடைபெற உள்ளது. தலைமை தபால் நிலையம் எதிரில் காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

News July 26, 2024

மயிலாடுதுறையில் அதிரடி காட்டிய கு.செல்வபெருந்தகை

image

மயிலாடுதுறை ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு எம்.எல்.ஏக்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சமையல் கூடம் மிகவும் சுகாதாரமற்று இருந்ததாக தெரிகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த கு.செல்வபெருந்தகை சமையலர் செல்லப்பா, காப்பாளர் மோகன், ஆதி., நல அலுவலர் சுரேஷ், இளநிலை பொறியாளர் லட்சுமிகாந்தன் ஆகிய 4 பேரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்தார்

News July 25, 2024

மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க அழைப்பு

image

மயிலாடுதுறை அருகே ஐவநல்லூர் , காளி, கொற்கை, முருகமங்கலம், நமச்சிவாயபுரம் , பாண்டூர், பொன்னூர், தாழஞ்சேரி, திருமங்கலம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி காளி கிராமத்தில் யு.மு.சு மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை ஜூலை 26ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

மைசூர் ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள்

image

மைசூர் – கடலூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அதனை ஏற்று மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

News July 25, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஜூலை 25) 30 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 25, 2024

கல்லூரி வகுப்பறை திறப்பு விழா எம்எல்ஏ பங்கேற்றார்

image

மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 3.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 24 வகுப்பறைகளை தமிழக முதலமைச்சர் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News July 25, 2024

ரயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை ரயில் நிலையத்தை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வருகின்ற ஜூன் 28ஆம் தேதி ரயில் நிலையம் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 4 மணி அளவில் ரயில்வே நிலையம் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர்.

News July 24, 2024

மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் “மக்களுடன் முதல்வர் முகாம்” ஆத்தூர், பூதங்குடி , கடலங்குடி, கேசிங்கன், கிழாய், முடிகண்டநல்லூர், திருச்சிற்றம்பலம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி அங்குள்ள நிலவர் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 3 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று(ஜூலை 24) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!