India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான திறனாய்வு தேர்வு அரசு நகராட்சி பள்ளிகளில் நடைபெறவுள்ளது. 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று இத்தேர்வு நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தின் கீழ், உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் தொழில் தொடங்கவும், குறுந்தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தலுக்காகவும் கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை, நீர்நிலைகள் மற்றும் குளங்களில் நிரப்புவதற்கும், குறுவை சாகுபடிக்கு பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு அப்போது உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 1 துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் , 4 காவல் உதவி ஆய்வாளர்கள், 13 காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் உபரிநீரை நீர்நிலைகளில் நிரப்ப எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மாலையில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை பிடித்து சிறப்பாக பணிபுரிந்த, தனிப்படை காவலர்களை நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து காவலர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் மறைந்த அப்துல் கலாமின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது . இதனை முன்னிட்டு சர்வதேச காலம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் எழுதுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முக்கியஸ்தர்கள் பங்கேற்று மாணவர்களிடம் சிறப்புரையாற்றினர்.
திருச்சியிலிருந்து இன்று இரவு 11 மணிக்கு துவங்கி மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு நாளை காலை 6.05 மணிக்கு செல்லும் வகையில் சிறப்பு மெமு ரயில் ஒரு நாள் மட்டும் இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவதும் முன்பதிவு இல்லாத வகையில் பயணிக்கக் கூடியதாக அமைந்துள்ள இந்த ரயில் இரவு 12.05 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.