Madurai

News December 10, 2024

கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

image

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அழகாபுரியைச் சேர்ந்தவர் சோலைமலைக் கோன் (58). இவர் 2019ல் அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கரன் (50) என்பவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ஜாய் சோலைமலைக்கோனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News December 10, 2024

சபரிமலைக்கு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு 

image

கொல்லம் செகந்திராபாத் சிறப்பு ரயில் 2 வாரங்களுக்கு மட்டும், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத்திலிருந்து கொல்லத்திற்கு வியாழக்கிழமையும், கொல்லத்திலிருந்து செகந்திராபாத்க்கு சனிக்கிழமையும் இவை இயக்கப்படும். நாளை காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கும். இதில் ஸ்லீப்பர், 3ம் வகுப்பு ஏசி 2ம் வகுப்பு ஏசி உள்ளது, என தெற்கு ரயில்வே இன்று(டிச.10) அறிவித்துள்ளது.

News December 10, 2024

சத்திரபட்டி வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் 

image

வெளிச்சநத்தம் விசிக கொடிகம்ப விவகாரம் விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பம் ஏற்றியது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் அனிதா பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு. ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக கிராம உதவியாளர் பழியாண்டி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 10, 2024

மதுரை மாவட்ட பகல் ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்ட பகல் ரோந்து பணி இன்று(டிச.10) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியீடு. பேரையூர் ஊமச்சிகுளம் திருமங்கலம் மேலூர் சமயநல்லூர் உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு பகல் 2 மணி முதல் மாலை 5மணி வரை பகல் ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

News December 10, 2024

மதுரை விசிக விவகாரம்-கிராம உதவியாளர் சஸ்பெண்ட்

image

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெளிச்சநத்தம் பகுதியில் 25 அடி உயர கொடிக்கம்பம் 45 அடி உயரத் கொடிக்கம்பம் மாற்றப்பட்டதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில் விசிக கொடி கம்பத்தை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக கிராம உதவியாளர் பழனி ஆண்டியை பணியிடை நீக்கம் செய்து மதுரை வடக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

News December 10, 2024

சுதந்திர போராட்ட தியாகி பெ.கட்டசாமி மறைவு!

image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு அருகே கண்மாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பெ.கட்டசாமி நேற்று (டிச.09) இரவு காலமானார். இவரது ஓய்வூதிய எண் SFF 14083 என்பது குறிப்பிடத்தக்கது. 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவரும் கலந்து கொண்டார். அலிபுரம் பெல்லாவி சிறையில் ஆறு மாதத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டு விடுதலை பெற்றார்.

News December 10, 2024

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் டிசம்பர் 14-ஆம் தேதி மதுரை தல்லாகுளம் சமூக அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்கின்றனர்.

News December 10, 2024

மதுரை சாலைகளில் அதி நவீன காமிராக்கள்

image

மதுரை போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா திங்கட்கிழமை பேசுகையில், ”சென்னை, கோவையை போல மதுரையிலும் ஏஎன்பிஆர் காமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன காமிராக்களை, எம்ஜிஆர் சிலையில் துவங்கி மாட்டுத்தாவணி மெயின் ரோட்டிலும், சிம்மக்கல், காளவாசல் பகுதியிலும் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது ” என்றார்.

News December 10, 2024

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

image

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்காக வருகிற 13-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

News December 9, 2024

மதுரை மக்களுக்கு அதிமுக துரோகம் செய்தது: மு.க ஸ்டாலின்

image

மதுரை டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகங்களுக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி; டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு கொடுக்க காரணமான சட்டதிருத்ததை அதிமுக ஆதரித்தது; திமுக எதிர்த்தது; எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்து விட்டு இங்கே நாடகமாடுவது எடுபடாது” என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!