Madurai

News January 10, 2025

கலெக்டர் கார் மீது ரவுடி வரிச்சூர் செல்வம் கார் மோதல்

image

மதுரை கலெக்டர் சங்கீதா, மேலூரில் டங்ஸ்டன்க்கு எதிராக போராடும் மக்களை நேற்று சந்தித்து விட்டு, காரில் மதுரை திரும்பினார். கார் உயர்நீதிமன்றம் அருகே வரும் போது, பின்னால் வேகமாக வந்த கார் ஆட்சியரின் கார் மீது மோதியதில், காரின் பின்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது, ஆட்சியர் உயிர் தப்பினார். விசாரணையில், கார் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வரிச்சூர் செல்வம் கார் என தெரிய வந்துள்ளது.

News January 9, 2025

மதுரை மாவட்டத்தின் இரவு ரோந்து காவலரின் எண்

image

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு (ஜனவரி 9) ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வழியாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

மேலூரில் ரேசன் பொருட்கள் வாங்க மறுப்பு

image

மதுரை, மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை முழுமையாக ரத்து செய்யும் வரை ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அரசின் எந்த சலுகையும் வேண்டாம் என அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். 1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை கொண்ட மக்கள், ரேசன் பொருட்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2025

மதுரை வழியாக தூத்துக்குடி – பெங்களூரு சிறப்பு ரயில்!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில(06569) இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூருவில் இருந்து 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயில் மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி செல்லும். மறுமார்கமாக தூத்துக்குடியிலிருந்து 11ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும்.

News January 9, 2025

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எளிதில் செல்ல கியூ.ஆர்.கோடு

image

மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு பாதையின் நுழைவு வாயிலிலும் இந்த கோடினை கி.யூ.ஆர்.பக்தர்கள், வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போனில் ஸ்கேன் செய்து மேற்படி வாகன நிறுத்தத்திற்கு எளிதாக சென்று நிறுத்திக் கொள்ளலாம். பின்பு அங்கிருந்து ஆட்டோக்கள் அரசு மினி பேருந்துகள் மூலமாக திருக்கோவிலுக்கு சென்று பயன்பெற மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News January 9, 2025

மதுரை – போடி வழித்தடத்தில் சோதனை ரயிலை இயக்கம்

image

போடி – மதுரை ரயில் பாதை மின் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்த நிலையில், திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி மதுரையிலிருந்து போடிக்கு ‘ஆக்சிலேசன் மானிட்டரிங் சிஸ்டம்’ என்றழைக்கப்படும் ரயில் பாதை அதிர்வுகளை கணக்கிடும் நவீன கருவிகளுடன் கூடிய 3 பெட்டிகள் அடங்கிய ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 110 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில் செவ்வாய்கிழமை இரவு போடி சென்று மதுரை திரும்பியது.

News January 9, 2025

காவல்துறைக்கு மதுரை எம்.பி கண்டனம் 

image

மதுரை : வெங்கடேசன் எம்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணியில், DYFI மாவட்ட செயலாளர் தமிழரசனை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்? காவல் துறையின் இந்த அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

News January 9, 2025

சிறை சூப்பிரண்டு முன்ஜாமீன் மனு தள்ளுபடி

image

மதுரை மத்திய சிறையில் 11/2 கோடி மோசடி நடந்ததாக பதிவான வழக்கில் சிறை சூப்பிரண்டு ஊர்மிளா உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி, ” மோசடி நடந்ததாக பதிவான வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மனுதாரர்கள் முன்ஜாமீன் கோருவது ஏற்புடையதல்ல” என்று கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

News January 9, 2025

மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்

image

மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் (ஜன.9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய 9 ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது.

News January 9, 2025

டங்ஸ்டன் விவகாரத்திற்கு அதிமுக தான் காரணம்: அமைச்சர்

image

டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம சுரங்கங்களை ஒன்றிய அரசே ஏலம் விடலாம் என்ற சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்தது அதிமுக தான். இது தான் இந்த பிரச்னையின் மூலம். இன்றைக்கு அரசியல் ஆதாயத்திற்காக இப்பிரச்னையில் குளிர்காய நினைக்கிறீர்கள்” என பேரவையில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பேசி உள்ளது மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!