India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி – மதுரை அகல ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று சொன்னதாக மத்திய ரயில்வே அமைச்சர் கூறியதாக ஒரு செய்தி பரபரப்பானது. தெற்கு ரயில்வே சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை தூத்துக்குடி ரயில் வழித்தடம் கைவிடப்படவில்லை. பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு தனுஷ்கோடி ரயில்வே திட்டம் தான் கைவிடப்பட்டதாக அமைச்சர் கூறினார்” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பலியான விளாங்குடியை சேர்ந்த நவீன்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரையில் அவரது உடலை பெறப்போவதில்லை என குடும்பத்தினர் கூறி வரும் உறவினர்கள் ஆட்சியர் நேரில் வந்து இழப்பீடு வழங்குவது குறித்து உறுதியளிக்க வலியுறுத்தல்.
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளும், 900 மாடுபிடி வீரர்கள் களமாட உள்ளனர். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் மது அருந்தி வந்தது, ஆவணம் முறையாக இல்லாதது என 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 7 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது அருந்தியதாக 3 பேர் மற்றும் போதிய எடை இல்லாதது காரணமாக 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோலாகலமாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள், வீரர்களுக்கு பீரோ, கட்டில் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்படவுள்ளது.
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. முதலில் மகாலிங்கசுவாமி மடத்து காளை அவிழ்த்துவிடப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பார்வையாளர்களின் ஆரவாரத்தோடு போட்டி தொடங்கியது. இதில் 1000 காளைகள் 900 காளையர்கள் களமிறங்கியுள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்க்கொண்டனர். அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா தலைமையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டுள்ளனர். இதில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாட்டுப் பொங்கல் திருநாளான இன்று (ஜன.15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் காரும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது பரிசாக காளைக்கு நாட்டினப் பசு மற்றும் கன்று, வீரருக்கு பைக் வழங்கப்பட உள்ளது.
மதுரை கோவில் காளைக்கு மரியாதை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர் உள்ளிட்டோர் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் மனுவை பரிசீலித்து முடிவை எடுக்கலாம் என்றும்,
அதில் நீதிமன்றம் எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தை திருநாள் 2ம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.அந்தவகையில்,பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது. இந்நிலையில்,பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது.மருத்துவ பரிசோதனை மையத்தில் தகுதி பெற்றவர்களுக்கு மஞ்சள் நிற பனியன் வழங்கப்பட்டுள்ளது.இன்னும் சற்று நேரத்தில் காளையர்கள் களத்தில் இறங்கவுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில்
காயமடைந்தவர்கள் மொத்தம் – 46
மாடுபிடி வீரர்கள் -21, மாட்டின் உரிமையாளர்கள் -17, பார்வையாளர்கள் -6, காவலர் -1, பத்திரிக்கையாளர் -1, உயிரிழப்பு -1.
அதிக எண்ணிக்கையிலான காளைகளை பிடித்த வீரர்கள்
திருப்பரங்குன்றம் கார்த்தி – (301) – 19 காளை
திருப்புவனம் – முரளிதரன் (228)- 16 காளை.
அவனியாபுரம் கார்த்தி (107) – 13 காளைகள் பிடித்தனர்.
Sorry, no posts matched your criteria.