India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சி சிஎம்ஆர் ரோட்டில் உள்ள மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஜன.21) நடைபெற உள்ளது. மேயர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்பதால், பொது மக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து நிவர்த்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
இந்திய அளவில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் அதிகரித்துள்ள விமான சேவை, விமான பயணிகளின் வருகை குறித்த ஆய்வுகளின் அடிப்படையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மதுரை உள்பட 6 விமான நிலையங்கள் தரம் உயர்த்துப்பட்டுள்ளது. மதுரை உயர்த்துப்பட்டுள்ளது. மதுரை தரத்தை மூன்றிலிருந்து ஏபிடி தரம் இரண்டிற்கு உயர்த்தப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
முதல்வர் மதுரை மாநகரத்திற்கு 22.01.2025 அன்று வருகை வருகை தர இருக்கிறார். அன்றைய தினமே மதுரையிலிருந்து புறப்பட்டு செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர மாவட்ட எல்லைக்குள் 22.01.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வளாகங்கள் பறக்க மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடைவிதிக்கப்பட்டது.
மேலூர் அருகே அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் நல்ல செழியன்(40). இவர் 3 வருடங்களுக்கு முன் பேரையூரில் பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது வீட்டில் 2 நாட்களுக்கு முன் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இன்று அருகில் உள்ளவர்கள் துர்நாற்றம் வீச, உள்ளே சென்று பார்த்த போது பாதி அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
மாநகரக் காவல் ஆணையர் நேற்று செய்தியாளர்களிடம், “மதுரை நகரில் 63 இருசக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்களில் போலீஸார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
இது போன்ற தொடர் பணிகளால் நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது ” என்று கூறினார்.
இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டார்கள் அது ராஜீவ் காந்தி அரசுதான், அனால் மோடி அரசு அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளனர்.இலங்கையில் தனிநாடு வேண்டும். அதற்காக தான் மோடியை சந்தித்து வருகிறேன். இலங்கை மீனவர்களை கைது செய்த காரணம் கச்சத்தீவு தான். எல்லாத்துக்கும் காரணம் காங்கிரஸ் அரசுதான் என மதுரை ஆதினம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இன்று (19.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் கீழக்கரை கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்ற சர்வதேச பலூன் திருவிழா நேற்று துவங்கியது.
நேற்று மலையில் அதிவேகத்தில் காற்று வீசியதன் காரணமாக ஒரேஒரு பலூனை மட்டும் பறக்க விட முயற்சித்தனர். ஆனால்,பலூன் அங்கும்,இங்குமாக சாய்ந்தது. இதையடுத்து அந்த ராட்சத பலூன் காட்சி பொருளாக மட்டுமே இடம்பெற்றது
கடந்த மாதம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் முஸ்லிம் ஒருவர் ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இவ்விவகாரத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் நேற்று சில முஸ்லிம் அமைப்புகள் ஆடு பலிகொடுத்து விருந்து நடத்த திரண்டனர். அவர்களை தடுத்ததால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர்.
சென்னை எக்மோர் – மதுரை மெமோ ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்களை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது ரயில் எண்கள்-06061/06062 சென்னை எழும்பூர்-மதுரை மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வழித்தடங்களில் கூடுதல் நிறுத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி அம்பாத்துரை சோழவந்தான், கூடல்நகர் 18.01.2025, 19.01.2025 ஆகிய தேதிகளில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.