India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை துளசி பவுண்டேஷன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற மதுரை லூர்துநகரைச் சேர்ந்த சிந்துராஜ், கடந்த 2023ல் மயமானார். இதுகுறித்து விசாரணையில், மறுவாழ்வு மைய உரிமையாளர் ரவீந்திரனுக்கும் சிந்துராஜ் மனைவிக்கு நெருக்கம் ஏற்பட்ட நிலையில், அதனை கண்டித்த சிந்துராஜை ரவீந்திரன் கொலை செய்து தூத்துக்குடி தேரிக்காட்டில் புதைத்து தெரியவந்தது. இச்சம்பவத்தில் ரவீந்திரன், அவரது நண்பர் கண்ணன் ஆகியோர் கைது.
மதுரை மாநகரில் இன்று (24.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE செய்யவும்.
மதுரை நல்லூரில் பழமையான புதுக்குளம், புளிச்சிகுளம் கண்மாய் பகுதியில் செம்மண் எடுக்க தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பாலமுருகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, செம்மண் எடுக்க தடை கோரிய மனுவிற்கு தென் மண்டல காவல்துறை, மதுரை ஆட்சியர் உள்ளிட்டோர் மனு குறித்து பரீசீலனை நடவடிக்கை எடுத்து பதில் தர உத்தரவிட்டார்.
திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் 97 பேருந்துகள் உள்ளன. பணிமனையில் போதிய இடம் இல்லாததால் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இரவு நேரங்களில் வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று வெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தில் பேட்டரி திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது. பொறியாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவிலில் மதுரையைச் சேர்ந்த போட்டோகிராபர் புதுமண தம்பதியினரை வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சர்ச்சையாகி உள்ளது. கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ள கோபுரம் பின்புறத்தில் தெரியும் வண்ணம், புதுமண ஜோடி அமர்ந்து திரைப்பட வசனத்தில் வரக்கூடிய மதுபானம் குறித்த வரிகள் அடங்கிய வசனங்களோடு ரீல்ஸ் எடுத்தது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி வரும் 25ம் தேதி மதுரை மாவட்டத்தில் நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்களில் உள்ள நெகிழி கழிவுகளை அகற்றி அப்புறப்படுத்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்க ஆட்சியர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதையடுத்து மதுரை எம்பி.,சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களுக்கு மகத்தான வெற்றி. எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அரிட்டாபட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையடுத்து அரிட்டாபட்டி மக்கள் பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சந்தித்தனர். இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நல்ல செய்தி வரும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் சாலை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை ஏற்படும் விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று (ஜன.23) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், விபத்தை தடுப்பதற்கு சென்னை தொழில்நுட்ப கழகத்தில் (IIT) உள்ள சாலை பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை நாட அறிவுரை கூறினர்.
Sorry, no posts matched your criteria.